கொய்யாப்பழ குழம்பு
நறுக்கப்பட்ட கொய்யாப் பழங்கள்-2 ;
கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன்;
சிவப்பு மிளகாய்த்தூள்-2 ஸ்பூன் ;
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்;
கடுகு-1/4 ஸ்பூன்;
உளுத்தம்பருப்பு- ½ ஸ்பூன்;
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கருவேப்பிலை- தேவையான அளவு;
வெல்லப்பொடி –கொஞ்சம்:
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்
அதன் பின்னர் அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
எண்ணைய் சூடான பின்னர் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
தாளித்தபின்னர் அதனுடன் நறுக்கிய கொய்யாத்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதக்கிய பிறகு அதனுடன் கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
அதன் பின்னர் நன்றாக கலக்கிவிடவும்.
நன்கு கலக்கிவிட்டபின், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு கொதிக்கவிட வேண்டும்.
கொதித்தபின் இவற்றுடன் கருவேப்பிலை ,கொத்தமல்லி ஆகியவற்றை தூவி விட வேண்டும்.
இதன் பின்னர் இவற்றுடன் கொஞ்சம் வெல்லப் பொடியைப் போட்டு அடுப்பில் இருந்து இறக்கவேண்டும்.
குறிப்பு
கொய்யாப் பழங்களை , முழுவதும் பழங்களாகவோ, முழுவதும் காய்களாகவோ இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடையே மீடியமாக இருக்கவேண்டும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.