கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 25. August 2011

ரவைகேசரி-1

"கேசரியானது செய்வதிற்கு இலகுவானது
சுத்தமானது சுவையானது இனிப்பானது
அழகானது ரவையில் செய்யப்பட்டது
அத்துடன் இதில் கொழுப்புசத்து,சீனிசத்து,
மினரல்சத்து போன்ற பலசத்துக்கள் அடங்கியது
அத்துடன் சிறுவர் முதல் வயதானவரை
விரும்பியும் சாப்பிடுவதிற்கு இலகுவான ஒரு
தேனீர் நேர சிற்றுண்டியும் ஆகும்".


தேவையான பொருட்கள்
ரவை-1சுண்டு
சீனி-1சுண்டு
தேங்காய்ப்பால் or பசுப்பால்-1 +1/2தம்ளர் அல்லது 1 சுண்டு
நெய் ,பட்டர் அல்லது மாஜரீன்-25கிராம்
முந்திரியவற்றல் (பிளம்ஸ்) -25கிராம்
இரண்டாக உடைத்த முந்திரியபருப்பு(கயூ)-25கிராம்
கேசரிப்பவுடர் -தேவையானளவு
ஏலக்காய்தூள்-2தேக்கரண்டி


செய்முறை
முதலில் வாய் அகண்ட ஒரு
தாம்பாளத்தில் அல்லது தட்டில் 
1கிராம் நெய்,பட்டர் அல்லது 
மாஜரீனை போடவும்.

அதன் பின் அதனை அப்பாத்திரம் 
முழுவதிலும் படுமாறு நன்றாக 
பூசவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
அல்லது வாணலியைவைத்து சூடாக்கவும்.

சூடாக்கியபின் அதில் ரவையை போடவும்.

அதன் பின்னர் ரவையை மர அகப்பையால் 
அடிப்பிடிக்காமல் வறுக்கவும்.

ரவையை ஒரளவு பொன்னிறமாக 
வறுக்கவும்.

ரவை பொன்னிறமாக வறுக்கப்பட்ட 
பின்னர் அதனை ரவையுள்ள தாச்சியை 
அல்லது வாணலியை அடுப்பிலிருந்து 
இறக்கவும்.

அதன் பின்னர் பொன்னிறமாக வறுத்த 
ரவையை வேறு ஒரு பாத்திரத்தில்  
போட்டு ஆறவிடவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு தாட்சியை 
அல்லது வாணலியை வைத்து அதில் 
10 கிராம் நெய் ,பட்டர் அல்லது மாஜரீனை 
போட்டு சூடாக்கவும்.

நெய் ,பட்டர் அல்லது மாஜரீனை சுடாக்கிய 
பின்னர் அதில் உடைத்த முந்திரிய பருப்பை
(கயூவை) அதில் போட்டு ஓரளவுபொரிக்கவும்.

ஓரளவு பொரிந்தபின்னர் அதில் முந்திரிய
வற்றலை போட்டு (கருகாமல்) ஓரளவு 
பொரிக்கவும்.

பொரித்தபின்னர் முந்திரியப்பருப்பு 
முந்திரியவற்றல் போடப்பட்டுள்ள 
பாத்திரத்தை அடுப்பில் இருந்து 
இறக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் 
முந்திரியப்பருப்பு முந்திரியவற்றலை 
வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு 
வைக்கவும்.

அதன்பின்னர் ஒருபாத்திரத்தில் தேங்காய் 
பாலுடன் அல்லது பசுப்பாலுடன் தேவையா
னளவு கேசரிப்பவுடரை நன்றாகவும் கட்டிப்
படாமலும் கலக்கவும்.

கலந்த பின்னர் அப்பாத்திரத்தை அடுப்பில் 
வைத்து நன்றாக கொதிக்கவிடவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் பொன்னிற
மாக வறுத்த ரவையை போடவும்.

வறுத்த ரவை போட்டபாத்திரத்தினுள் 
சீனியை போட்டு நன்றாக கலக்கவும்.
(எல்லா ரவையுடனும் சீனி நன்றாக 
கலந்துவிட்டதா என கவனிக்கவும்)

அதன் பின்னர் கேசரிப்பவுடர் கலந்த 
பால் நன்றாக கொதித்த பின்னர் சீனி
யுடன் கலந்துவைத்துள்ள ரவையை 
கேசரிப்பவுடர் கலந்து கொதிக்க
வைத்துள்ள பாலுடன் கொஞ்சம்
கொஞ்சமாக போட்டு கட்டிப்படாமல்
நன்றாக கிளறி ஓரளவு அவிய விடவும்.

ஓரளவு அவிந்த பின்னர் அதனுடன் நெய்,
பட்டர் அல்லது மாஜரீனில் பொரித்து 
வைத்துள்ள முந்திரியப்பருப்பு (கயூ) முந்திரி
யவற்றல் ஆகியவற்றை போட்டு நன்றக 
கலந்து அவியவிடவும்.

அதன் பின்னர் அதனுடன் ஏலக்காய் தூளை 
கலக்கவும்.

அதன் பின்னர் மிகுதியாக உள்ள 14கிராம் 
நெய்,பட்டர் அல்லது மாஜரினை  சிறிது 
சிறிதாக கலக்கவும். 

இவையாவும் சேர்ந்து அடிப்பிடிக்காமல் 
இறுகி திரளும்பதம் வந்ததும்.

அதனை அடுப்பிலிருந்து இறக்கி நெய்,
பட்டர் அல்லது மாஜரீன் பூசிய பாத்திரத்தில் 
போடவும்.

போட்டபின் சூட்டுடன் ஓரளவு உயரத்தில் 
அதனை நன்றாக பரப்பவும்.

பரப்பிய பின்னர் ஒரு கத்தியால் தேவைனளவு
துண்டுகளாக  ஓரளவு உயரத்தில் கீறிவிடவும்.

அதன் பின்னர் அதனை ஆறவிடவும்.

விரும்பினாள் குளிர்சாதனப்பெட்டியில்
வைத்து குளிரேற்றி ஆறவிடலாம்.

ஆறிய பின்னர் சுவையான சுத்தமான பார்ப்பதிற்கு
அழகான கேசரி தயாராகிவிடும்.

அதன் பின்னர் தேவையானளவு துண்டுகளை
வெட்டி ஒரு தட்டில் வைத்து பறிமாறவும் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.