கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 13. November 2011

கரட் இலை வறை


உடல்சுருக்கம் மறையவும் , இன்சுலின் 
சுரக்கவும்,கண் பார்வை பிரகாசமாக 
தெரியவும், வறண்ட சருமம் மறையவும் 
சுத்தமான சுவையான சத்தான கரட் இலை 
வறையை செய்து சாப்பிடவும்.அத்துடன் 
இந்த வறையில் கல்சியம், உயிர்ச்சத்து 
(விற்றமின்) ஏ, டி ,ஈ ஆகியன காணப்படுகிறது.

தேவையான பொருட்கள் 
    பொடியாக நறுக்கிய கரட் இலை - தேவையானளவு
      உப்பு - தேவையானளவு
        பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையானளவு
          பொடியாக நறுக்கிய உள்ளி(பூண்டு) - ஒரு பல்
            தேசிக்காய்ச்சாறு(லைம்ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி
              பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - தேவையான அளவு
                எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
                  கடுகு - அரைத் தேக்கரண்டி
                    சீரகம் - அரைத் தேக்கரண்டி
                      கறிவேப்பிலை - தேவையான அளவு
                        தேங்காய்ப்பூ - தேவையான அளவு

                        செய்முறை 
                        (1)ஒரு பாத்திரத்தில் சிறிதாக வெட்டிய 
                           கரட் இலைகளை கழுவி வைக்கவும். 

                        (2)அடுப்பில் தாட்சியை(வாணலியை)
                            வைத்து சூடாக்கவும்.

                        (3) தாட்சி (வாணலி)சூடான பின்னர் 
                            அதில் எண்ணெய் விட்டு கொதிக்க
                            விடவும்.

                        (4 )எண்ணெய் கொதித்ததும் அதில் 
                              கடுகு, சீரகம், வெங்காயம், உள்ளி, 
                             பச்சைமிளகாய், கறிவேப்பிலை 
                             போட்டு தாளிக்கவும்.
                          (4)தாளித்த பின்னர் அதில் சிறிதாக
                             வெட்டிய கரட் இலைகளை போட்டு 
                            கிளறவேண்டும். 

                          (5)அவை யாவும் நன்றாக கலந்து 
                              திரளான  பின்பு அவற்றுடன் 
                             தேங்காய்ப்பூ ,உப்பு ஆகியவற்றை 
                             சேர்த்து கலக்க வேண்டும்.
                            (6)அதன் பின்பு தேசிக்காய்ச்சாறு (லைம்
                                (லெமன்)ஜூஸ்)சேர்த்து கலக்கவேண்டும்.

                            (7)எல்லாம் கலந்த பின்பு 2 நிமிடங்கள் 
                               அடுப்பில் வைத்திருக்கவும்.

                            (8) அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான 
                                  கரட் இலை வறை தயாராகிவிடும்.  

                            (9)தயாரான பின்னர் அடுப்பில் இருந்து 
                                தாட்சியை (வாணலியை)இறக்கவும்.

                            (10)அதன் பின்பு ஒருதட்டில் சாதம்
                                 (சோற்றினை)வைத்து கார்ட் இலை
                                வைத்து பரிமாறவும்.

                            குறிப்பு 

                            (1)இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் 
                                 வைத்தியரின் ஆலோசனைப்படி 
                               உண்ண வேண்டும். 

                            Keine Kommentare:

                            Kommentar veröffentlichen

                            Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.