பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுத்தம்மா முறுக்கு ஆகும்.
தேவையான பொருட்கள்
வறுக்காத அரித்தஉளுத்தம் மா - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமா(மைதாமாவு) - 2 சுண்டு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தேங்காய்ப்பால் - தேவையானளவு
செய்முறை
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்
(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக
அரைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வறுக்காத அரித்த
உளுத்தம் மா, அவித்தகோதுமைமா(மைதா
மா), உப்பு, பெருஞ்சீரகம் (சோம்பு),எள்,இஞ்சி
விழுது, உள்ளி(பூண்டு) விழுது, அரைத்த
செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறி
வேப்பிலைதுண்டுகள், பட்டர் ஆகியவற்றுடன்
நன்றாக கொதித்த தேங்காய்ப்பாலை சேர்த்து
பிசைந்து(குழைத்து) கொள்ளவும் (இடியப்பமா
பதத்தில்).
பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .
எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).
பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.
அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.
முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
பரிமாறவும்.
எச்சரிக்கை -
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.
கவனிக்கவேண்டிய விசயங்கள்-
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.
மாற்று முறை -
கொதித்த பாலுக்கு பதிலாக கொதித்த
தண்ணீரை விட்டு பிசையலாம் குழைக்கலாம்
விட்டு குழைக்கலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.