கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 27. November 2011

அன்னாசிப்பழக்கறி


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
பழத்தில் செய்த கறியானது மேற்குறிப்பிட்ட
சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த
உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன்
காணப்படும். இந்த கறியின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டு
அறியவும்.


தேவையான பொருட்கள் 
அன்னாசிப்பழம்-1
மிளகாய்த்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் -சிறிதளவு 
உப்பு -தேவையானளவு
பொடிபொடியாகநறுக்கியவெங்காயம் -1
பெருஞ்சீரகம்(சோம்பு) -கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பொடிபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
பொடிபொடியாக நறுக்கியஉள்ளி(பூண்டு)-6 
பால் - சிறிதளவு 
சிறிதாக வெட்டிய  கறிவேப்பிலை -சிறிதளவு
தேசிக்காய்ப்புளி - தேவையானளவு
எண்ணெய்- சிறிதளவு 


செய்முறை 
தோல் நீக்கி சுத்தமாக்கிய அன்னாசிப்
பழத்தை ஓரளவு சிறியதுண்டுகளாக 
வெட்டவும்

வெட்டியபின் அவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு மூடி  வைக்கவும் 

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து சூடாக்கவும்

தாட்சி சூடானதும் அதில் சிறிதளவு
எண்ணையை விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு
போட்டு பொரிய விடவும்

அதன் பின்னர் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),பொடிபொடியாகநறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
ஓரளவு பொரியவிடவும்.

ஓரளவு பொரிந்த பின்னர் அதனுடன்
பொடிபொடியாக நறுக்கிய பச்சை
மிளகாயை போட்டு தாளிக்கவும் .

தாளித்த பின்னர் தாளித்தவற்றுடன் 
மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் பொடி
பொடியாக நறுக்கிய உள்ளி(பூண்டு) 
ஆகியவற்றை போட்டு பிரட்டி 
மிளகாய்த்தூளின் பச்சை வாடை
யில்லாமல்  போகும்வரை பொரிய
விடவும்.

அதன் பின்னர் அவற்றுடன் சுத்தப்
படுத்தி கழுவி வெட்டிய அன்னாசிப் 
பழத்துண்டுகளை போடவும்

அன்னாசிப்பழ துண்டுகளை போட்ட
பின்னர் தாட்சியை முடி ஓரளவு 
அவியவிடவும்

அன்னாசிப்பழ துண்டுகள் ஒரளவு 
அவிந்த பின்னர் உப்பு,போடவும் 

உப்பு போட்ட பின்னர் அதனுடன் 
பாலைவிட்டு கொதிக்கவிடவும்

கொதித்த பின்னர் அதனுடன்
கறிவேப்பிலையை போட்டு
சிறிது நேரம் அவிய விட்டு
அடுப்பில் இருந்து இறக்கவும் .

அதன் பின்னர் சுத்தமான
சுவையான சத்தான அன்னாசிப்பழ
கறி தயாராகிவிடும்

பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன்
சுத்தமான சுவையான சத்தான
அன்னாசிப்பழகறியை வைத்து
பரிமாறாவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.