கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 19. November 2011

அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்


அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்டானது 
விற்றமின் சி சத்து நிறைந்த சலாட் ஆகும் . 

தேவையானபொருட்கள் 
அப்பிள்பழம் - ஒன்று
வெட்டியகோவா(கபேஜ்)  - 250 கிராம்
பெரியவெங்காயம் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - ஒன்று
மெல்லியகுவாக்- 2 மேசைக்கரண்டி
பிளம்ஸ்(சுல்டானாஸ்) - 2 மேசைக்கரண்டி
உடைத்த முந்திரிகை (கஜு) - 2 மேசைக்கரண்டி
சீனி (சர்க்கரை) - அரைத் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

செய்முறை 

1.அப்பிள் பழத்தை கழுவி அதன் தேவையற்ற
பகுதியை (விதை அதனுடன் சேர்ந்த பகுதி)
அகற்றி சிறு துண்டுகளாக வெட்டவும்

2.வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
போடவும்

3.அதன் பின்னர் வெங்காயத்தின் தோலை
  யுரித்து குருணியாக வெட்டவும்.

4.குருணியாக வெட்டிய வெங்காயத்தை
   ஒரு பாத்திரத்தில் போடவும்.

5.பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை
    விடவும்.

6. அதன் பின்னர் அதனுடன் தேசிக்காய்
   சாறு (லெமன் ஜூஸ்), வெங்காயம்,
   உப்பு, சீனி (சர்க்கரை), கடுகு குவாக்
    ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

7.கலக்கிய பின்னர் சாஸ் தயாராகிவிடும்

8.அதன் பின்னர் வெட்டிய கோவா(கபேஜை)
   வெட்டிய அப்பிள் துண்டுகள் ஆகியவற்றை
   செய்து வைத்துள்ள சாஸில் போடவும்.

9.போட்ட பின்பு அதனுடன் பிளம்ஸ்(சுல்டா
  னாஸ்) சுத்தம் செய்து சாஸில் போடவும்.

10.போட்ட பின்னர் அதை குளிரான ஒரு இடத்தில்
       வைக்கவும்.

11.அதன் பின்பு அதை எடுத்து அதில் கஜூ போட்டு
     உடனே பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
1.அப்பிளை கழுவி அதன் தேவையற்ற பகுதியை
(விதை அதனுடன் சேர்ந்த பகுதி)அகற்றி சிறு
துண்டுகளாக வெட்டவும்.
2.வெங்காயத்தினை குருனியாக வெட்டவும்.
3.குளிரான இடத்தில் வைக்கவும்.
4.கஜூ போட்டவுடன் பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.