கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 12. November 2011

கோவா (கபேஜ்)வறை



கோவா உயிர்ச்சத்து (விற்றமின்)- சி நிறைந்த
ஒரு தாவரம் அத்துடன் கோவாவை (கபேஜ்)
பாலூட்டும் தாய்மார் சாப்பிட்டால்
அவர்களுக்குஏற்படும் நோவானது
மாறிவிடும்.இப்படிப்பட்டகோவாவில்
(கபேஜில்)செய்யப்பட்ட வறையானது சுத்தமானது,சுவையானது,சத்தானது
 ஆகும்.

    தேவையான பொருட்கள்
    மெல்லிய  நீளமான (கபேஜ்) - 1கப்
    மிளகாய்த்தூள்- தேவையானளவு
    வெட்டிய வெங்காயம் -  1-2 
    பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
    கடுகு - சிறிதளவு
    எண்ணெய் - தேவையானளவு
    உப்பு - தேவையானளவு
    முட்டை- 1
    தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

    செய்முறை

    (1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
    சுடாக்கவும்.

    (2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
    சுடாக்கவும்

    (3)எண்ணெயை சூடான பின்னர் அதில்
    வெங்காயம்,கடுகு, சீரகம் ஆகியவற்றை
    போட்டு தாளிக்கவும்

      (4)தாளித்த பின்னர் அதில் மெல்லியதாக
       நீளமாகவெட்டிய கோவா (கேபேஜை)
      போட்டு மூடி (2-3)நிமிடங்கள் அவியவிடவும்

        (5)அவிந்த பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
        வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
        வேண்டாம்).

          (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் முட்டை,
          உப்பு, தேசிக்காய் சாறு(லைம் ஜூஸ்)ஆகிய
          வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி
          இறக்கவும்.

            (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
            சத்தான கோவாவறை தயாராகிவிடும்.


            (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
            ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.


            (9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
            (சாதத்தை) அல்லது பாணை வைத்து
            அதனுடன் சுத்தமான சுவையான
            சத்தான கோவா(கபேஜ்)வறையை
            வைத்து பரிமாறவும்.

            Keine Kommentare:

            Kommentar veröffentlichen

            Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.