கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 8. November 2011

சோயா வடை


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பகூடிய, சத்துகள் நிறைந்த சுவையான
சிற்றுண்டியே சோயா வடை ஆகும்.

தேவையான பொருட்கள் 
சோயா பருப்பு - ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் சோயாவை போட்டு அதன்
மேல் ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு)
விடவும். (சோயாவை விட தண்ணீர்
கூடுதலாக இருக்கவேன்டும்).

அதன் பின்பு அதை (கால் -அரை) மணி
நேரம் ஊறவிடவும்.

(கால்-அரை) மணித்தியாலங்களுக்கு பின்பு சோயாவில்
உள்ள தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்
(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு
தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்
(நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர்
சேர்க்ககூடாது).

பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த சோயாவுடன் சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி(பூண்டு),நசுக்கியஇஞ்சி
ஆகியவற்றை கலக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு அதை நன்றாக
கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம்
கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி
அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டி
அதன் நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும்.
இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு
ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து
விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி
நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால்
வடையின் உட்பகுதி நன்றாக அவியாது)

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த
எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக
பொரிக்கவும்

பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை -
சோயாஅலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

மாற்று முறை -
1.கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம்.
2.:உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
3.விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால்
தேக்கரண்டி சேர்க்கலாம்.
4..வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்துவிட்டு
தேவையான நேரத்தில் அதை எடுத்து செய்யலாம்
5..அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில் வைத்து
தேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ அவனில்
வைத்து சூடாக்கி உண்ணலாம் .

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.