கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 9. November 2011

இஞ்சித்துவையல்


இஞ்சியானது ஜீரணத்திற்கு, நெஞ்செரிச்சல்,
வயிற்று பொருமலுக்கு இது அவசியமான
ஒன்றாகும்.இப்படிப்பட்ட இஞ்சியில்
செய்யப்படும் துவையலானது சுத்தமானது
சுவையானது சத்தானது மருத்துவகுணம்
உடையது ஆகும்.

தேவையான பொருட்கள்
தோல் நீக்கியஇஞ்சி - 100 கிராம்
கடுகு - 1தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - அரைப்பாதி
எண்ணெய் - 1தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
வெட்டியவெங்காயம் - பாதி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்புளி(லைம்ஜூஸ்)-1தேக்கரண்டி

செய்முறை
(1)அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
     சூடாக்கவும்.

(2)அதன்பின்னர் அதில் எண்ணெயை விட்டு
     சூடாக்கவும்.

(3)சுடாக்கிய பின்னர்அதில் கடுகை போட்டு
     வெடிக்கவிடவும்.

(4)கடுகு வெடித்ததும் வெட்டிய வெங்காயத்தில்
     கால் பகுதியை போட்டு ஒரளவு பொரிய
     விடவும்.
(5)அது ஒரளவு பொரிந்ததும் சீரகத்தை
     போட்டு தாளிக்கவும்.

(6)பின்பு தோல் நீக்கிய இஞ்சியை சிறிய
     துண்டுகளாக வெட்டவும்.
(7)வெட்டிய இஞ்சி துண்டுகளுடன்,
     உப்பு,வெட்டிய கால் பகுதி
    வெங்காயம்,கறிவேப்பிலை
    தேசிக்காய் புளி (லெமன் ஜூஸ்)
    போட்டு  நன்றாக  அரைத்து
    கொள்ளவும்.

(8)அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில்
    போடவும்

(9)அரைத்தவற்றுடன் தாளித்தவற்றை
     சேர்த்து நன்றாக கலக்கவும்.

(10) கலந்த பின்னர் சுத்தமான சுவையான
      சத்தான இஞ்சித்துவையல் தயாராகி
      விடும்.

(11)தயாரான பின்னர் ஒரு தட்டில் சோறுடன்
      (சாதத்துடன்)சுத்தமான் சுவையான சத்தான
      இஞ்சித்துவையலையும் வைத்து பரிமாறவும்.
"குறிப்பு"

இருதய நோயாளர் தேங்காய்ப்பூ சேர்க்காமல்
உளுத்தம்பருப்பு வறுத்து சேர்த்து கொள்ளவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.