கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 27. Dezember 2011

உளுத்து குவாகுவா


தேவையான பொருட்கள்
உளுந்து - ஒரு சுண்டு
உப்பு - தேவையானளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கிய) - 1
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையானளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு


செய்முறை

ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதன் மேல்
ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு) விடவும்.
(உளுந்தினை விட தண்ணீர் கூடுதலாக இருக்க
வேன்டும்).


அதன் பின்பு அதை 1 மணி நேரம் ஊறவிடவும்.


1மணித்தியாலங்களுக்கு பின்பு உளுந்தில் உள்ள
தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்
(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு
தண்ணீர் சேர்த்து (ஓரளவு தண்ணீர் பதமாக)
நன்றாக அரைக்கவும்


பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக
கலக்காது).


அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த உளுந்துடன்
சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம்,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி
(பூண்டு),நசுக்கியஇஞ்சி ஆகியவற்றை கலக்கவும்.


அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு
அதை நன்றாக கொதிக்கவிடவும்.


அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவில்
சிறிதளவை கரண்டியில் எடுத்து கொதித்த
எண்ணெயில் போடவும்.


கொதித்த எண்ணெயில் அரைத்து கலந்த
உளுந்தினை கரண்டியால் எடுத்து போட்ட
பின்னர் அதனை பொரிய விடவும்


எண்ணையில் போட்ட மா உப்பி ஓரளவு
மஞ்சள் நிறமாக பொரிய விடவும் .


உப்பி ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிந்த பின்னர்
அவற்றில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு
அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறிது நேரம் மூடிவைக்கவும்(அதன் உட்பகுதி
நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால்
உட்பகுதி நன்றாக அவியாது)


இப்படியே அரைத்து கலந்த எல்லா உளுந்தினயும்
போட்டு பொரித்து எடுத்து முடி வைக்கவும்


அதன் பின்பு பொரித்து முடி வைத்தவற்றினை
எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு
நல்ல பொன்னிறமாக பொரிக்கவும்
பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
உளுந்து குவா குவா தயாராகிவிடும்


அதன் பின்பு சுத்தமான சுவையான உளுந்து
குவாகுவாவில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு முடி வைக்கவும்.


அதன் பின்பு சிறிய தட்டில் சுத்தமான சுவையான
சத்தான தேவையானளவான உளுந்து குவா குவா
வினை வைத்து அதனுடன் காரமான சம்பல் அல்லது
பச்சடி அல்லது சோஸ் ஆகியவற்றில் ஒன்றினை
சிறிதளவு வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை -
உளுந்து அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை -

1 :கருப்பு உளுந்துக்கு பதிலாக வெள்ளை 
    உளுந்திலும் செய்யலாம்,
2 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
3 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால் 
    தேக்கரண்டி சேர்க்கலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1 .உட்பகுதி நன்றாக அவிந்தது விட்டதா என்பதை
   கவனிக்கவும்.
2.வெங்காயம் சேர்த்தவுடன் பொரிக்கவும் 
   (கனநேரம் வைத்திருக்ககூடாது. வைத்திருந்தால்
    வெங்காயத்தினுள் உள்ள நீர் வெளியேறி உளுந்து 
     குவாகுவாவை பழுதாடையசெய்துவிடும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.