தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 2 கப்,
முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
உப்பு-தேவையானளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசியை ஒரு
மணித்தியாலம் ஊற வைக்கவும்.
மற்றைய பாத்திரத்தில் முழு
உளுத்தம் பருப்பை ஒரு மணித்தி
யாலம்ஊறவைக்கவும்.
அதன் பின்னர் முழு உளுத்தம்
பருப்பினை நன்றாக கழுவி அதன்
தோலை அகற்றவும்
அதன் பின்னர் மிக்ஸியில் அல்லது
கிரைண்டரில் ஊறிய அரிசியை
போட்டு நைஸாக அரைக்கவும்
அரைத்த பின்னர் அதனை ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
பின்னர் மிக்ஸியில் அல்லது
கிரைண்டரில் ஊறிய உளுந்தை
போட்டு தண்ணீர் தெளித்து
பொங்க அரைக்கவும்
அரைத்த பின்னர் அதனை அரைத்த
அரிசியை உள்ளபாத்திரத்தில் போட்டு
வைக்கவும்
பின்னர் அவற்றிற்கு உப்பு போட்டு
நன்றாகஅடித்து கலந்து 6 முதல் 8 மணி
நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
இட்லி மா புளித்த பின்பு அடுப்பில் இட்லி
செய்யும் பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு அதனுள்
இட்லி அவிக்கும் தட்டினைவைத்து அதன்
மேற் மூடியால் மூடி பின்பு அதனை
சூடாக்கவும்.
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.
நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.
அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.
அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
தயாராகிவிடும்.
அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.
பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
அவிக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பார் அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.