தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
சீனி(சர்க்கரை) - 250 கிராம்
அரிசி மா - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதனுடன் உளுந்தை விட ஓரளவு அதிகமான தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .
அதன் பின்னர் கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் ஊரிய உளுந்தை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து, அதனுடன் அரிசி மாவும் உப்பும் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும்
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து அதில் சீனி (சர்க்கரை) யை போடவும் .
சீனி(சர்க்கரை) போட்ட பின்னர் அதனுடன் சீனி(சர்க்கரை) மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் இவற்றுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
இவை யாவற்றையும் பாகு காய்ச்சவும்.
பாகு பிசுபிசு பதத்தில் வந்த பின்னர் காச்சிய பாகினை இறக்கி வைக்கவும்
பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடான பின்னர் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்
பொரித்து எடுத்த வடைகளை சீனி (சர்க்கரைப்) பாகில் போட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
சிறிது நேரத்தின் பின்னர் அவற்றை பாகில் இருந்து வடையை எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்பு
உளுந்தை தண்ணீர் நிறைய சேர்த்து அரைக்க கூடாது அப்படி அரைத்தால் எண்ணெய் அதிகம் தேவைப்படும்
உளுந்தை கெட்டியாக அரைத்தால் அரிசி மாவு சேர்க்கத் தேவையில்லை.
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
சீனி(சர்க்கரை) - 250 கிராம்
அரிசி மா - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதனுடன் உளுந்தை விட ஓரளவு அதிகமான தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .
அதன் பின்னர் கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் ஊரிய உளுந்தை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து, அதனுடன் அரிசி மாவும் உப்பும் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும்
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து அதில் சீனி (சர்க்கரை) யை போடவும் .
சீனி(சர்க்கரை) போட்ட பின்னர் அதனுடன் சீனி(சர்க்கரை) மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் இவற்றுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
இவை யாவற்றையும் பாகு காய்ச்சவும்.
பாகு பிசுபிசு பதத்தில் வந்த பின்னர் காச்சிய பாகினை இறக்கி வைக்கவும்
பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடான பின்னர் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்
பொரித்து எடுத்த வடைகளை சீனி (சர்க்கரைப்) பாகில் போட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
சிறிது நேரத்தின் பின்னர் அவற்றை பாகில் இருந்து வடையை எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்பு
உளுந்தை தண்ணீர் நிறைய சேர்த்து அரைக்க கூடாது அப்படி அரைத்தால் எண்ணெய் அதிகம் தேவைப்படும்
உளுந்தை கெட்டியாக அரைத்தால் அரிசி மாவு சேர்க்கத் தேவையில்லை.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.