கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 4. August 2012

வெள்ளரிக்காய் சோறு

தேவையான பொருட்கள் 
பச்சையரிசி சோறு  – 1 கப்
வெள்ளரிக்காய்  துருவல் – 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி – 1 துண்டு
தேசிக்காய்பழச்சாறு – 1 மேசைகரண்டி
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு -1/2தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
நெய் அல்லது மாஜரின்  - 1 மேசைகரண்டி

செய்முறை

ஒரு தட்டில்  பச்சை மிளகாய், இஞ்சி 
ஆகியவற்றை பொடிப் பொடியாக
 நறுக்கி வைக்கவும்.

 தாட்சியை அடுப்பில் வைத்து சூடாக்கிய 
பின்னர் அதில் நெய்யை  ஊற்றி சூடாக்கவும் 

நெய் சூடான பின்னர் அதில் கடுகு,உளுத்தம்பருப்பு
ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்

தாளித்த பின்னர் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், 
பெருங்காயம் மஞ்சள்தூள் வெள்ளரி துருவல்,
உப்பு ஆகியவற்றை போட்டு 5 நிமிடங்கள் 
வதக்கிய பின்னர் அதனை அடுப்பில் இருந்து  
இறக்கவும்.


அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சோற்றினை 
போடவும்

அதனுடன் வதக்கியவை  எலுமிச்சம்பழச்சாறு
ஆகியவற்றை நன்றாக கலக்கவும் .

கலந்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
வெள்ளரிக்காய் சோறு தயாராகிவிடும் 

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு 
சுத்தமான சுவையான சத்தான வெள்ளரிக்காய் 
சோற்றினை வைத்து பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.