கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 12. August 2012

உருளைக்கிழங்கு குருமா


கிழங்கு வகைகளிலேயே எல்லோருக்கும்
மிகவும் பிடித்தமான ஒரே கிழங்கு உருளைக்
கிழங்கு ஆகும் இக்கிழங்கில் மாச்சத்து
அதிகளவில் காணப்படுகிறது அத்துடன் இதில்
எத்தனையோ விதமான சமையல்  குறிப்பு
களும் உள்ளன அதிலும் குறிப்பாக பலருக்கு
உருளைக்கிழங்கை சிப்ஸ் செய்து சாப்பிட
பிடிக்கும் .சிலருக்கு அதனை பொரியல்,
வறுவல் என்று செய்து சாப்பிட பிடிக்கும்.
ஆனால் நாங்கள் உங்களுக்கு உருளைக்
கிழங்கில் குருமாவை எப்படி செய்யலாம்
என்ற குறிப்பை தருகிறோம் அதன் படி
 உருளைக்கிழங்கில் குருமாவை செய்து
சாப்பிட்டு அதன் சுவையை அறிந்து மகிழவும்.
அத்துடன் நீங்கள் விரும்பினாள் நீங்கள் செய்த
உருளைக்கிழங்கு குருமாவின் சுவை அதன்
படம் ஆகியவற்றை எங்களுக்கு அறியத்தரவும்

 தேவையான பொருட்கள்: 
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 6 
நறுக்கியவெங்காயம் - 2 
நறுக்கியதக்காளி - 4
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
கருவாப்பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
துருவியதேங்காய் - 1/2 மூடி
 கசகசா - 2 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 உப்பு - தேவையானளவு

 செய்முறை: 
 மிக்ஸியில் தேங்காய்.கசகசா ஆகியவற்றை 
போட்டு நன்கு அரைக்கவும்

 அதன் பின்னர் ஒரு வாணலி(தாட்சி)யை
 அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்
ஊற்றி கொதிக்கவிடவும்.

 எண்ணெய் கொதித்ததும், அதில் கருவாப்
பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி
விழுது பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து
வதக்கவும்

 பின்னர் நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய
தக்காளி ஆகியவற்றை அதனுடன் சேர்த்து
 நன்றாக வதக்கவும்.

 இவையாவும் நன்றாக வதங்கிய பின்னர்
அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை
 போட்டு வதக்கவும்.

 அதன் பின்னர் அவற்றுடன் மிளகாய்த்
தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் உப்பு
ஆகியவற்றை சேர்க்கவும்.

 அதன் பின்னர் இவற்றுடன் தண்ணீர் விட்டு
நன்றாக கொதிக்க விடவும்

 இவையாவும் நன்றாக கொதித்ததும்
இவற்றுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய்
கலவையைப் போட்டு நன்றாக கிளறிவிடவும்

. அதன் பின்னர் இவற்றின் பச்சை வாசனை
போகும் வரை கொதிக்கவிடவும்.

 இவையாவும் கொதித்த பின்னர் சுத்தமான
சுவையான சத்தான உருளைக்கிழங்கு குருமா
 தயாராகிவிடும்.

 அதன் பின்னர் தயாரான உருளைக்கிழங்கு
குருமா உள்ள பாத்திரத்தை அடுப்பில் இருந்து
இறக்கவும்.

 ஒரு தட்டில் சாதம், சப்பாத்தி ,பூரி,பாண்,
இடியப்பம்,பிட்டு ஆகியவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் சுத்தமான சுவையான
சத்தான உருளைக் கிழங்கு குருமாவையும்
வைத்து பரிமாறவும் .

இக்குறிப்பை வழங்கியவர் -
திரு.துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.