கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 13. August 2012

கருணை கிழங்கு பகோடா

கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள்
இருக்கின்றன. கருணை கிழங்கை
வழக்கமான வறுவல் போல் செய்யாம
ல், இப்படி பக்கோடாக்களாக செய்தால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
 அனைவரும் விரும்பி சாப்பிடுவர். 

தேவையானவை
 கருணை கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/4 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்
 அரிசி மாவு - 1 ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
 பூண்டு - 5
 சீரகம் - 1 ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 உப்பு,
எண்ணெய் - தேவைகேற்ப

 செய்முறை

கருணை கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக
 நறுக்கிகொள்ளவும். 

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள்
தூள், கருணை கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.

வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும்

 சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு
மிளகாய் தூள், கடலை மாவு, சோள மாவு,
அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து
பேசியாவும். (இந்த கலவையில் நிறைய
தண்ணீர் சேர்க்க கூடாது.)

 தயாரித்த கலவையுடன் வேகவைத்த கருணை
கிழங்கை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து
எண்ணெய்யில் பொரிதெடுத்தால் மொறு
மொறுப்பான சுவைமிகுந்த கருணை கிழங்கு
பக்கோடா தயார்

இக்குறிப்பை வழங்கியவர்
திரு துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.