கிழங்கு வகைகளிலேயே எல்லோருக்கும்
மிகவும் பிடித்தமான கிழங்கு உருளைக்கிழங்கு
ஆகும் இக்கிழங்கில் மாச்சத்து அதிகளவில்
காணப்படுகிறதுஅத்துடன் இதில் எத்தனையோ
விதமான சமையல்குறிப்புகளும் உள்ளன
அதிலும் குறிப்பாக பலருக்கு உருளைக்
கிழங்கை சிப்ஸ் செய்து சாப்பிட பிடிக்கும்
.சிலருக்கு அதனை பொரியல், வறுவல் என்று
செய்து சாப்பிட பிடிக்கும். ஆனால் நாங்கள்
உங்களுக்கு உருளைக்கிழங்கில் குருமாவை
எப்படிசெய்யலாம் என்ற குறிப்பை தருகிறோம்
அதன் படி உருளைக்கிழங்கில் குருமாவை
செய்து சாப்பிட்டு அதன் சுவையை அறிந்து
மகிழவும்.அத்துடன் நீங்கள் விரும்பினாள்
நீங்கள் செய்த உருளைக்கிழங்கு குருமாவின்
சுவை அதன் படம் ஆகியவற்றை எங்களுக்கு
அறியத்தரவும்
தேவையான பொருட்கள்:
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 6
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 4
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
கருவாப்பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
துருவியதேங்காய் - 1/2 மூடி
கசகசா - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய்.கசகசா ஆகியவற்றை
போட்டு நன்கு அரைக்கவும்
அதன் பின்னர் ஒரு வாணலி(தாட்சி)யை
அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி
கொதிக்கவிடவும்.
எண்ணெய் கொதித்ததும், அதில் கருவாப்
பட்டை,இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி
விழுது .பூண்டு விழுது ஆகியவற்றை
சேர்த்து வதக்கவும்
பின்னர் நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய
தக்காளிஆகியவற்றை அதனுடன் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
இவையாவும் நன்றாக வதங்கிய பின்னர்
அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை
போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் அவற்றுடன் மிளகாய்த்
தூள், மஞ்சள்தூள், மல்லித் தூள் உப்பு
ஆகியவற்றை சேர்க்கவும்.
அதன் பின்னர் இவற்றுடன் தண்ணீர்
விட்டு நன்றாக கொதிக்க விடவும்
இவையாவும் நன்றாக கொதித்ததும்
இவற்றுடன்அரைத்து வைத்துள்ள
தேங்காய் கலவையைப் போட்டு
நன்றாக கிளறிவிடவும்.
அதன் பின்னர் இவற்றின் பச்சை
வாசனை போகும் வரை கொதிக்க
விடவும்.
இவையாவும் கொதித்த பின்னர்
சுத்தமான சுவையான சத்தான
உருளைக்கிழங்கு குருமா தயாராகி
விடும்.
அதன் பின்னர் தயாரான உருளைக்
கிழங்கு குருமா உள்ள பாத்திரத்தை
அடுப்பில் இருந்து இறக்கவும்.
ஒரு தட்டில் சாதம், சப்பாத்தி ,பூரி,பாண்,
இடியப்பம்,பிட்டு ஆகியவற்றில் ஒன்றை
வைத்துஅதனுடன் சுத்தமான சுவையான
சத்தான உருளைக்கிழங்கு குருமாவையும்
வைத்து பரிமாறவும் .
இக்குறிப்பை வழங்கியவர் -
திரு.துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.