கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 22. März 2013

பச்சைப்பயறு போண்டா

தேவையான பொருட்கள்
முழு பச்சைப் பயிறு - 200 கிராம்
கொத்துமல்லி இலை- ஒரு சிறு கட்டு
அரிசி - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
கோவா(கோஸ்) - 100 கிராம்
துவரம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் -தேவையானளவு 
செத்தமிளகாய்(வற்றல்)-தேவையானளவு 
பெருங்காயம்-தேவையானளவு
கறிவேப்பிலை-தேவையானளவு 
உப்பு - தேவையானளவு


செய்முறை

பச்சைப் பயிறைக் களைந்து அரிசி, 
பருப்பு வகைகளுடன் ஊற வைத்துக் 
கொள்ளவும்.

அவற்றுடன் பச்சை மிளகாய்,செத்த 
மிளகாய் (வற்றல்), பெருங்காயம் 
போன்றவற்றை தேவையான அளவு 
சேர்த்து வடைக்கு அரைப்பதைப் 
போன்று நன்கு அரைத்துக் 
கொள்ளவும்.

வெங்காயம், கோவா(கோஸ்)  கொத்த
மல்லி இலை கருவேப்பிலையைப் 
ஆகியவற்றை பொடியாக நறுக்கி 
அரைத்து வைத்த மாவுடன் கலக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கவும் 

சூடான எண்ணெயில் வடைகளாகவோ, 
போண்டாக்களாகவோ தட்டிப் போட்டு 
பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.

தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சூடாகச் 
சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். 

வெங்காயத்தைத் தவிர்த்துப் பொடியாக 
நறுக்கிய கீரை, சௌ சௌ, கேரட் சேர்த்தும் 
செய்யலாம்.


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.