தேவையான பொருட்கள்
முழு பச்சைப் பயிறு - 200 கிராம்
கொத்துமல்லி இலை- ஒரு சிறு கட்டு
அரிசி - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
கோவா(கோஸ்) - 100 கிராம்
துவரம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் -தேவையானளவு
செத்தமிளகாய்(வற்றல்)-தேவையானளவு
பெருங்காயம்-தேவையானளவு
கறிவேப்பிலை-தேவையானளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை
பச்சைப் பயிறைக் களைந்து அரிசி,
பருப்பு வகைகளுடன் ஊற வைத்துக்
கொள்ளவும்.
அவற்றுடன் பச்சை மிளகாய்,செத்த
மிளகாய் (வற்றல்), பெருங்காயம்
போன்றவற்றை தேவையான
அளவு
சேர்த்து வடைக்கு அரைப்பதைப்
போன்று நன்கு அரைத்துக்
கொள்ளவும்.
வெங்காயம், கோவா(கோஸ்) கொத்த
மல்லி இலை கருவேப்பிலையைப்
ஆகியவற்றை பொடியாக நறுக்கி
அரைத்து வைத்த மாவுடன் கலக்கவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கவும்
சூடான எண்ணெயில் வடைகளாகவோ,
போண்டாக்களாகவோ தட்டிப் போட்டு
பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.
தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சூடாகச்
சாப்பிட்டால் மிகவும் சுவையாக
இருக்கும்.
வெங்காயத்தைத் தவிர்த்துப் பொடியாக
நறுக்கிய கீரை, சௌ சௌ, கேரட்
சேர்த்தும்
செய்யலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.