தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - 1 கப் ஏலக்காய்பவுடர் - 1 தேக்கரண்டி
பலாப்பழ துண்டுகள் - 2 கப்
வெல்லத்தூள் - 1 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி,தண்ணீர் ஆகியவற்றை
போடவும்.
அவற்றைஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு ஊறவைத்தவற்றை உரலில்
அல்லது கிரைண்டரில் போட்டு ரவை போன்று
அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும்
பின்பு உரலில் அல்லது கிரைண்டரில் வெல்லம்,
பலாப்பழத்துண்டுகள் ஆகிய வற்றை போட்டு
மையாக அரைக்கவும்.
அரைத்தபின்னர் அரைத்தவற்றை அரிசிமாவுடன்
சேர்த்து கலக்கவும்.
அதன்பின் அவற்றுடன் ஏலக்காய்பொடியை
போட்டு நன்றாக கலக்கவும்
கலந்தவற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்
அதன் பின்பு அவற்றை அரை மணித்தியாலம்
புளிக்கவிடவும்
அரை மணித்தியாலத்தின் பின்பு அடுப்பில்
தோசைகல்லை வைத்து சூடாக்கவும்
அதில் நெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை
தோசை போல் வார்த்து எடுத்துக் கொள்ளவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.