கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 22. August 2013

ஜவ்வரிசி இட்லி

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி(சவ்வரிசி)  - 1/2 கப்
ரவை - 1 + 1/2 கப்
தயிர் - 1 +1/2 கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1கப்
அப்பச்சோடா(சமையல்சோடா)- 1/4தேக்கரண்டி
கடுகு - 1தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 1 +1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கயூ(முந்திரி) - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1/4 கப்
கொத்தமல்லி இலை - 1/4 கப்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி,ரவை,உப்பு,தயிர் ஆகியவற்றை போடவும்.

அதன் பின்னர் அவற்றை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும் .

பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணையை விட்டு கொதிக்கவிடவும் .

எண்ணைய் நன்றாக கொதித்ததும் அதில்
 கடுகு,கயூ(முந்திரி),பச்சைமிளகாய் ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும் .

தாளித்ததும் அவற்றை ஊறவைத்த
கலவையில் போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் ஊறவைத்த கடலை பருப்பு,
துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை, மல்லி இலை ஆகிய
வற்றையும் ஊறவைத்த கலவையில்
போட்டு நன்றாக கிளற வேண்டும்.

பின்பு இதனுடன் அப்பச்சோடாவை
போட்டு நன்றாக கலக்கவும்

பின்பு இட்லிப்பானையின் அரைவாசிக்கு
தண்ணீர்விட்டு இப்பாத்திரத்தை அடுப்பில்
வைக்கவும்.


அதன் பின்பு அதனுள் இட்லி தட்டுகளை
வைத்து மூடி சூடாக்கவும் .


இட்லி தட்டுகள் சூடாகியதும்மூடியை திறந்து
இட்லி தட்டுகளை வெளியே எடுத்து அதனுள்
தேவையானளவு கலந்தமாவை போட்டு இட்லி
பானையில் வைத்து வேகவிடவும்.


இட்லி வெந்தபின்பு அடுப்பிலுள்ள
பாத்திரத்தில்  இருந்து இட்லி தட்டை
வெளியே எடுத்து அதில் இருக்கும்
இட்லிகளை எடுத்து  ஒரு பாத்திரத்தில்
 போட்டு வைக்கவும்.


அதன் பின்பு சுவையான சுத்தமான  சத்தான ஜவ்வரிசி இட்லிகள் தயாராகிவிடும் .


இட்லிகள் தயாரான பின்பு ஒரு தட்டில்
தேவையான இட்லிகளை வைத்து 
அதனுடன் சம்பல்,சட்னி,சாம்பார்,
ஏதாவது கறி ஆகியவற்றில் ஒன்றை
வைத்து பரிமாறவும் .

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.