கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 24. August 2013

பப்பாசிகுழிப்பணியாரம்


தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
பப்பாளிப்பழ விழுது - அரை கப்
துருவிய வெல்லம் - கால் கப்
பால் - ஒரு கப்
பாதாம், முந்திரித்துருவல் - கால் கப்
கிஸ்மிஸ் - சிறிதளவு


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவை ,பப்பாசிப்பழவிழுது,
வெல்லம்,பால், பாதாம், முந்திரிப்பருப்பு(கயூ), 
கிஸ்மிஸ் ஆகியவற்றை போடவும் 

அதன் பின்னர் எல்லாவற்றையும் நன்றாக கலந்து 
ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.

 ஊறிய பின்பு  யாவற்றையும் நன்றாகக் கலக்கவும். 

 கலந்த பின்னர் குழிப்பணியாரச் சட்டியை 
அடுப்பில் வைக்கவும்

வைத்த பின்னர் குழிப்பணியாரச் சட்டியின் ஒவ்வொரு 
குழியிலும் நெய் விட்டு வைக்கவும்

 பின்னர் கலந்து வைத்துள்ள கலவையைக் குழியில்
 பாதியளவு ஊற்றவும் 

ஊற்றியவற்றை  மிதமான தீயில் வேக விடவும். 

வெந்தவற்றை குழியில் திருப்பிப் போடவும் 

 அதன் பின்னர் அதில் நெய் விட்டு பொன்னிறமாக 
பொரித்தெடுக்கவும் 

பொரித்தவற்றை ஒரு தட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.