கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 27. Oktober 2013

கச்சான்(வேர்க்கடலை) பக்கோடா


தேவையான பொருள்கள் 
வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப்
கடலை மா-1/2கப்
அரிசிமா-4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1தேக்கரண்டி
இஞ்சி,விழுது-1/2தேக்கரண்டி
பூண்டு விழுது-1/2தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில்  வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை) ,கடலை மா,உப்பு,
இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,அரிசி
மா ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்

கலந்தவற்றை 5நிமிடம் வைக்கவும்

அதன்  பிறகு அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடானதும் அதில் கலந்து
வைத்துள்ளவற்றில் சிறிதளவை
கையில் எடுத்து சூடான எண்ணெய்யில்
 தூவி விடவும்

அதன் பின்னர் தீயை குறைவாக வைத்து
பொன்னிறமாக நன்கு பொரிய விடவும்

பொன்னிறமானக பொரிந்ததும் அடுப்பில்
உள்ள தாட்சியில் இருந்து எடுத்து வேறு
ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறவிடவும்

சூடு ஆறியதும் சுத்தமான சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)பக்கோடா
தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)
பக்கோடாவை போட்டு பறிமாறவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.