உடைத்தபயறு- ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
சிறியதுண்டுகளாக்கியபெரியவெங்காயம்-1
சிறியதுண்டுகளாகநறுக்கியபச்சைமிளகாய்- 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
உடைத்த மிளகு-சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் உடைத்த பயற்றினை
போட்டு அதன்மேல் ஒரளவு கொதித்தநீரை)
(நகச்சூடு)விடவும். (பயற்றினைனை
விட தண்ணீர்கூடுதலாக இருக்கவேன்டும்).
அதன் பின்பு அதை (3-5) மணி
நேரம் ஊறவிடவும்.
(3-5) மணித்தியாலங்களுக்கு பின்பு ஊறிய
உடைத்த பயற்றில்உள்ள தண்ணீரை வடித்து
விட்டு அதை கிரைண்டரில்(மிக்ஸியில்)
அல்லது ஆட்டுகல்லில் போட்டு கொரகொர
வென்று அரைக்கவும்
(நன்றாக அரைக்ககூடாது)(தண்ணீர்
சேர்க்ககூடாது).
பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக
கலக்காது).
பின்பு உப்பு கலந்து அரைத்த பயற்றுடன் சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம்,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி
(பூண்டு),நசுக்கியஇஞ்சி உடைத்த மிளகு ஆகிய
வற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்துஅதில் அரைவாசிக்கு எண்ணெய்
விட்டு அதை நன்றாக கொதிக்கவிடவும்.
அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை
கொஞ்சம்கையில் எடுத்து அதை ஓரளவு
உருண்டையாக்கிஅதை கையின் நடுப்
பகுதியில் வைத்து ஓரளவு தட்டிஅதன்
நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.
கொதித்த எண்ணெயில் செய்த வடையை
போடவும்.இதே போல் கொஞ்ச வடைகளை
செய்து போட்டுஓரளவு மஞ்சள் நிறமாக
பொரிக்கவும்.
பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை
வடித்துவிட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திர
த்தில் போட்டுசிறிது நேரம் மூடிவைக்கவும்
(வடையின் உட்பகுதிநன்றாக அவிவதற்காக
அப்படி செய்யாவிட்டால்வடையின் உட்பகுதி
நன்றாக அவியாது)
அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும்
கொதித்தஎண்ணெயில் போட்டு நல்ல
பொன்னிறமாகபொரிக்கவும்
பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை
வடித்து விட்டுஅதை ஒரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.
பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து
பரிமாறவும்.
எச்சரிக்கை -
பயறு அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.
மாற்று முறை -
1 :கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம்.
2 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
3 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்)
அரைகால்தேக்கரண்டி சேர்க்கலாம்.
4.வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்து
விட்டுதேவையான நேரத்தில் அதை எடுத்து
செய்யலாம்
5 .அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில்
வைத்துதேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ
அவனில் வைத்து சூடாக்கி உண்ணலாம் .
கவனிக்கவேண்டியவிஷயங்கள்
1 .வடையின் உட்பகுதி நன்றாக அவிந்தது
விட்டதா என்பதை கவனிக்கவும்.
2.வெங்காயம் சேர்த்தவுடன் வடையை
பொரிக்கவும்(கனநேரம் வைத்திருக்ககூடாது.
வைத்திருந்தால்வெங்காயத்தினுள் உள்ள நீர்
வெளியேறி வடையைபழுதாக்கிவிடும்)
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.