தேவையான பொருட்கள்
வெள்ளைச் சோளம்- 1 கப்,
பச்சையரிசி – 1 கப்,
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு.
எண்ணெய் – தேவையானளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெள்ளைச்
சோளம் தண்ணீர் ஆகியவற்றை
போட்டு இரண்டு மணி நேரம்
ஊற வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் பச்சையரிசி
தண்ணீர் ஆகியவற்றை போட்டு
இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
வேறு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு
தண்ணீர் ஆகியவற்றை போட்டு
இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு கிரைண்டரில் ஊறிய வெள்ளை
சோளம் தண்ணீர் ஆகியவற்றை
போட்டு தோசைமா பதத்தில் தனியாக
அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்
பின்பு கிரைண்டரில் ஊறிய உளுத்தம்
பருப்பு தண்ணீர் ஆகியவற்றை போட்டு
தோசைமா பதத்தில் தனியாக
அரைக்கவும்.
அரைத்தவற்றை அரைத்தசோளம் போட்ட
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
தண்ணீர் ஆகியவற்றை போட்டு
தோசைமா பதத்தில் தனியாக
அரைக்கவும்
அரைத்தவற்றை அரைத்த சோளம்
உழுத்தம்பருப்பு ஆகியவை போட்ட
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
பிறகு பாத்திரத்தில் போட்ட எல்லா
மாவையும் ஒன்றாக கலந்து
அதனுடன் உப்பு போட்டு கலக்கவும்.
கலந்த பின்னர் இந்த மாவை, 10 முதல்
12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
சூடான தோசைக் கல்லில், எண்ணெய்
பூசிஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும்
வகையில் அரைத்த மாவை தோசைக்
கல்லில் ஊற்றவும்.
அதன் பின் ஒரு பக்கம் வேகவிடவும்
பிறகு சிறித்தளவு எண்ணெயை தோசை
மேல் விடவும்
அதன் பின்னர் தோசையை மற்றைய
பக்கம் திருப்பிப் போட்டு வேகவிடவும்
தோசை இருபக்கமும் நன்றாக வெந்ததும்
எடுக்கவும்.
இப்போது சுத்தமான சுவையான சத்தான
சோளதோசை தயாராகிவிட்டது
அதன் பின்னர் எடுத்த தோசையை
ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
இப்படியே மற்றதோசைகளையும் சுட்டு
எடுத்து முதல் தோசை போட்ட
பாத்திரத்தில் வைக்கவும்
பின்பு ஒரு தட்டில் தேவையானளவு
தோசைகளை வைத்து அதனுடன் காய்கறி
குருமா சிறிதளவு வைத்து பறிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.