கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 17. Januar 2014

மஞ்சள் கிழங்கு சலாட்
















இது நாம் பொங்கல் பானையில் கட்டி 
விட்டுத் தூக்கிப் போடும் பச்சை(இளம் 
காய வைக்காத ) மஞ்சள் கிழங்கு . 
இந்த மஞ்சளில் சலாட்

தேவையான பொருட்கள் 

காயவைக்கதாத மஞ்சள் -150 -200 கிராம்,
பெரிய வெங்காயம் -3
தக்காளிப்பழம்-3,
எண்ணெய் -5-4 ஸ்பூன்,
பெருஞ்சீரகம் -கைப் பிடி 
தயிர் - 1 கப்.
உப்பு - தேவையானளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு


தாளிக்க தேவையானபொருட்கள்

கறிவேப்பிலை-சிறிதளவு
வரமிளகாய்- 3 - 5
வெள்ளுத்தம் பருப்பு-சிறிதளவு



செய்முறை 

முதலில் பச்சை (இளம்) மஞ்சள் கிழங்கைத் 
தோலுரித்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக 
கொள்ளுங்கள்,

பின்னர் வெங்காயத்தை நீளமாகவே 
அல்லது சிறிய துண்டுகளாக வெட்டிக் 
 கொள்ளுங்கள்(வதங்கும் வண்ணம்).

பின் தக்காளிப்பழத்தை  8 துண்டுகளாக 
அல்லது பொடிப் பொடியாக வெட்டிக் 
கொள்ளுங்கள்(வதங்கும் வண்ணம்). 


அடுப்பில் தாட்சியை (வாணலியினை)
 வைத்து அதில் எண்ணெய் விட்டு 
சூடாகவும்

 சூடானதும் அதில் கடுகு,வெள்ளுத்தம் 
பருப்பு, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை,
மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் ஆகிய
வற்றை போட்டுத் தாளிக்கவும்

தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைப் 
போட்டு பொன்னிறமாக வதக்கவும்,

வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன், 
இவற்றுடன் எண்ணெய்யில் மஞ்சளை 
சிறிது வதங்கவும்,

பின்னர் இவற்றுடன் தக்காளிப்பழம் ,உப்பு 
ஆகியவற்றை போட்டு நன்றாக  வதக்கவும். 

 மஞ்சளை நன்றாக வதக்க வேண்டும்,

மஞ்சள் நன்றாக  வதங்கி சுருண்டு வரும் 
போது அடுப்பை அனைக்கவும்  

அணைத்த பின்னர் வரும்  சூட்டில் சிறிது
வேக விடவும்

இது அடுப்பின் சூட்டில் இருக்கும் போது, 1கப்
 தயிரில் சிறிது தண்ணீர் விட்டு தளர்க்கமாக 
செய்து கொள்ளுங்கள்.

அதிக தண்ணீர் இல்லாமல் அதே சமயம் 
கெட்டியாக இல்லாமலும் இருக்கட்டும்

கைப் பிடி சீரகத்தை இரு கைகளிலும் 
நல்லா திருகி அல்லது தேய்த்து அதன் 
மேல் நார் இருந்தால் ஊதி அப்புறப் படுத்தி 
விட்டு, தயிரில் போடவும்.

வெந்தவை ஆறிய பின் அவற்றை தயிரில்
 போட்டுக் கலக்கவும்

தயிரில் போட்டு கலந்த பின்னர் அவற்றுடன் 
சுவைக்கு ஏற்றவாறு உப்பு போடவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான மஞ்சள்
 கிழங்கு சலாட்தயாராகிவிடும்

ஒரு தட்டில்  ரொட்டி, சப்பாத்தி பாண் இவற்றில் 
ஒன்றை வைத்து இதனுடன் மஞ்சள் கிழங்கு 
சலாட்டை வைத்து பறிமாறவும் 


குறிப்பு 

 மஞ்சள் கிழங்கு மிகவும் சூடானது
(உடலுக்கு உஷ்ணம்)அதனால் 
நாங்கள் தயிர் ,பெருஞ்சீரகத்தைச் 
சேர்க்கின்றேம்.

வரமிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் 
சேர்க்கலாம்

விரும்பினாள் வெங்காயத்தாள் (ஸ்பிரிங் 
ஆனியன்) லீக்ஸ்,சிறியசோளம் (பேபி கார்ன்), 
போன்றவற்றை இதனுடன் சேர்த்துக்
கொள்ளலாம் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.