கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 15. Januar 2014

பாகற்க்காய் பிட்ல

தேவையான பொருட்கள் 

1.பாகற்க்காய் - 10
2. கடலைப் பருப்பு- ஒரு கைப்பிடி.
3.துவரம் பருப்பு - கால் கைப்பிடி,
4.புளிக்கரைசல் ஒரு டம்ளர்.
5.பச்ச மிளகாய் இரண்டு

அரைக்க தேவையான பொருட்கள் 

6.கடலைப்பருப்பு - 1ஸ்பூன்.
7.வெந்தயம் -1/2 ஸ்பூன்.
8.மிளகு - 1ஸ்பூன்
9.தனியா அல்லது கொத்தமல்லி- 2 ஸ்பூன்
10.தோங்காய்த்துருவல் - 3 ஸ்பூன்.

தாளிக்க தேவையான பொருட்கள் 

11. எண்ணெய் - 3ஸ்பூன்
12.கடுகு.
13.கறிவேப்பிலை



செய்முறை 

முதலில் பாகற்காயை படத்தில் காட்டியபடி
சிறு சிறு துண்டுகளாக வெட்டி,கொஞ்சூண்டு
உப்பு,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு,
அரைடம்ளர் தண்ணீர் விடலாம் அல்லது
தண்ணீர் தெளித்த மாதிரி விட்டு,குக்கரில்
ஒரு அடுக்கில் வைக்கவும், மறு அடுக்கில்
துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பைத்
 மூழ்கும் அளவுத் தண்ணீர் இட்டு

வேக வைக்கவும்.(பாகற்க்காய் குழையாத
 அளவுக்கு தண்ணீரும், விசிலும் விடவும்)

ஒரு பெரிய வாணலில் ஒரு டம்ளர் புளிக்
கரைசலில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு,
அதில் உப்பு(தேவையான அளவு, காயில்
உப்புப் போட்டுருப்பதால் பார்த்துப் போடவும்),
மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் போட்டு
கொதிவிடவும். பச்ச மிளகாயை இரண்டாக
கீறிப் போடவும்.

புளித்தண்ணீர் கொதிப்பதுக்குள் வெந்தயம்,
சிறிது கடலைப்பருப்பு,தனியா,மிளகு ஆகிய
வற்றை வறுத்து, தேங்காய்த்துருவலுடன்
 சேர்த்து, துவையல் போல அரைத்துக்
கொள்ளவும்.

புளித்தண்ணீர் பச்சை வாசம் போனவுடன்
அதில் பாகற்க்காய் மற்றும் வெந்த பருப்பு
க்களையும் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க
விடவும்.

பின்னர் அரைத்த விழுதினைப் போட்டுக்
கொதிக்க விடவும்.

நுரைக் கட்டி, கெட்டியாகி சாம்பார் வாசம்
 வரும் போது, இறக்கி வைத்து, அதில் கடுகு
,கறிவேப்பிலையைத் தேங்காய் எண்ணெய்யில்
 தாளித்துக் கொட்டவும்.

சுவையான பாகற்காய் பிட்ல ரெடி. இதுக்கு
 உருளை அல்லது கத்திரிக்காய் காரக் கறி
பண்ணினால் நல்லா இருக்கும்.

டிஸ்கி: உப்பு இரண்டு முறை போடுவதால்
கவனம் தேவை.

 இதுக்கு இரண்டு முறையும்குறைவாகப்
 போட்டு,சமைத்து முடித்த பின்னர் டேஸ்ட்
பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.

இது சாம்பார் போல கெட்டியாக இருக்க வேண்டும்.
 ஆதலால் பருப்புக்களை அதிகம் சேர்க்கவும்.
புளியில் தண்ணீர் பார்த்து விடவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.