கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 8. Januar 2014

முருங்கைக்கீரைத்துவையல்

முருங்கைக்கீரையில் காபோவைதரேற்று சத்து
சீனிச்சத்து நார்ச்சத்து கொழுப்புச்சத்து
புரதச்சத்து உயிர்சத்து A B9 C E K
கல்சியம் சத்து  இரும்புசத்து ஆகிய 
சத்துக்கள் காணப்படுகின்றன இப்படிப்
பட்ட கீரையுடன் வேறு பல பொருட்
களையும் சேர்த்து செய்யப்பட்டது 
சுத்தமான சுவையான சத்தான முருங்கைக்
கீரைத்துவையல் ஆகும் .இந்த முருங்கைக்
கீரைத்துவையல் கண் பார்வைக்கு சிறந்த
ஓர் உணவு.


தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை(கழுவிய) - 150 கிராம்
பச்சைமிளகாய் - 5
உள்ளி - ஒன்று (பெரியது)
கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தேங்காய்ப்பூ - பாதி (விரும்பினால்)
வெந்தயம் - 1 /4தேக்கரண்டி
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய்சாறு (லைம் ஜூஸ்)-1/4தேக்கரண்டி
கடுகு - 1 /4தேக்கரண்டி
சீரகம் (சோம்பு)- 1/2தேக்கரண்டி
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
வெங்காயம் - பாதி பாகம்


செய்முறை

1 .அடுப்பில் வெறுமையான வாணலி(தாச்சி)யை
   வைத்து அதை சூடாக்கவும்

2 .சூடாக்கிய பின்னர் அதில் கடலைப்பருப்பினை
   போட்டு நன்றாக வறுக்கவும்

3 .அது ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு
    தட்டில் போட்டு ஆறவிடவும்.

4.இதனைப் போல உளுத்தம் பருப்பினையும்
    போட்டு நன்றாக வறுக்கவும்.

5 ,அது ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு

    தட்டில் போட்டு ஆறவிடவும்.

6.அதன் பின்பு இதனைப்போல பச்சை மிளகாயை
   நன்றாக வறுக்கவும்

7.அது ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு
    தட்டில் போட்டு ஆறவிடவும்.

8.அதன் பின்பு வெந்தயதை போட்டு உடனே
   எடுத்துவிடவேண்டும் (இல்லாவிட்டால்
    கைப்பு சுவை ஏற்படும்)

9 .அதன் பின்னர் அதை ஒரு தட்டில் போட்டு
    ஆறவிடவும்.

10.அதன் பின்னர் கழுவிய முருங்கைக்கீரையுடன்
   இருக்கும் சிறிதளவு நீருடன் நன்றாக வதக்கவும்.

11.வதக்கிய பின்னர் அதனுடன் 1மேசைக்கரண்டி
   எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும்.

12 .அது ஓரளவு நன்றாக வதங்கியதும் அதை ஒரு
       தட்டில் போட்டு ஆறவிடவும்.


13.எல்லாம் ஆறியதும் கிரைண்டரில் (மிக்ஸியில்)
     வறுத்த கடலைப்பருப்பு வறுத்த உளுத்தம்பருப்பு,
     வறுத்த பச்சைமிளகாய், உள்ளி, வதக்கிய
     முருங்கைக்கீரை, வறுத்த வெந்தயம்,வெட்டிய
     வெங்காயம்,உப்பு இவையாவற்றையும் போட்டு
     போட்டு நன்றாக அரைக்கவும்

14.அரைத்த பிறகு இவற்றுடன் தேங்காய்ப்பூ போட்டு
     நன்றாக அரைக்கவும்.

15 .அரைத்த பின்பு அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில்
     போட்டு வைக்கவும் .

16.அதன் பின்னர் அடுப்பில் வாணலி(தாச்சி)யை வைத்து
     அதில் எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.

17.எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு வெடிக்க
    விடவும்

18.அதன் பின்னர் அதனுடன் சீரகம்(சேம்பு ), வெங்காயம்
    ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்

19.தாளித்த பின்னர் தாளித்தவற்றை அரைத்தவற்றுடன்
    போட்டு கலக்கவும்.

20.கலந்த பின்னர் அவற்றுடன் தேசிக்காய்சாறு (லைம்
     ஜூஸ்) போட்டு நன்றாக கலக்கவும்.

21.அதன் பின்னர்சுத்தமான சுவையான சத்தான
      முருங்கைக்கீரைத்துவையல் தயாராகிவிடும்

22.முருங்கைக்கீரைத்துவையல் தயாரான பின்னர்
     ஒரு தட்டில் சோறு(சாதம்) பாண் இடியப்பம் புட்டு
     தோசை இட்லி ஆகியவற்றில் ஒன்றினை வைத்து
      பரிமாறவும்


குறிப்பு 
விரும்பினால் தேங்காய்ப்பூ, உள்ளி சேர்க்கவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் தேங்காய்ப்பூவை சேர்க்காமல்
செய்து சாப்பிடவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.