கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 25. Mai 2014

காய்கறி போளி

தேவையானவை

 கரட் துருவல் – கால் கப்,  
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்,
 முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப், 
 கோதுமை மா– ஒன்றரை கப், 
 பால் – அரை கப், 
 பட்டை – 2 துண்டு,
 சோம்பு – அரை டீஸ்பூன், 
 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், 
 எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், 
 நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, 
 உப்பு – தேவையான அளவு. 

 செய்முறை: 

 ஒரு பாத்திரத்தில் கரட், முள்ளங்கி, 
முட்டை கோஸ் துருவலுடன் உப்பு 
சேர்த்து நன்கு கலந்து 

அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 
 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, 
மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, 
மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, 
நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து 
நன்கு பிசைந்து கொள்ளவும். 

 கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து 
சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் 
பிசைந்து கொள்ளவும். 

பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து…

 உருட்டிக் கிண்ணம் போல் செய்து, 
அதனுள் காய்கறி கலவையை வைத்து
 மூடவும். 

 அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று 
கனமாகத் தேய்க்கவும். 

 இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து 
தயார் செய்த பின் அவற்றை தோசைக்கல்லில் 
போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும். • சுவையான காய்கறி போளி ரெடி.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.