கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 8. Juni 2014

அவல் கிச்சடி

தேவையானப் பொருள்கள்: 

அவல்- 2 கப் 
பச்சைப்பட்டாணி-ஒரு கைப்பிடி 
கேரட்-1/4 பாகம் 
காலிஃப்ளவர்-கொஞ்சம் 
சின்ன வெங்காயம்-10 
தக்காளி-பாதி 
இஞ்சி-ஒரு சிறிய துண்டு 
பூண்டு-2 பற்கள் 
பச்சை மிளகாய்-2 
மஞ்சள் தூள்-சிறிது 
உப்பு-தேவைக்கு 
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து 
எலுமிச்சை சாறு-1/2 டீஸ்பூன் 

தாளிக்க: 

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன் 
கடுகு உளுந்து 
கடலைப் பருப்பு 
சீரகம் 
முந்திரி 
பெருங்காயம் 
கிராம்பு-2 
பிரிஞ்சி இலை-1 
கறிவேப்பிலை 

செய்முறை


பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். 

அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். 

அவல் நன்றாக ஊறி இருக்க வேண்டும்.ஆனால் குழைந்து இருக்கக்கூடாது. 

கரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும். 

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும். 

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும். 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு

 இஞ்சி, பூண்டு வதக்கிவிட்டு அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

 அடுத்து கரட், பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். 

காய்கள் நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் அவலைக்கொட்டிக் கிளறவும். தண்ணீர் சேர்க்க கூடாது. 

உப்பு தேவையானால் சேர்த்துக்கொள்ளவும். 

மிதமானத்தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். 

பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.