கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 23. Mai 2014

கோழி

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி சுத்தம் செய்ததுண்டுகள் – 1 கிலோ 
நீளமாக வெட்டியவெங்காயம் – 2 பெரியது
நீளமாக வெட்டியபச்சை மிளகாய் – 5 
நீளமாக வெட்டியஉள்ளி: 5 - 6 பற்கள்
கடுகு -  1/2 
மேசைக் கரண்டி
பெருஞ்சீரகம் – 1/2 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை – 2 -3 காம்பு
எண்ணெய்  - தேவையானளவு
 மிளகாய்த்தூள் – 
தேவையானளவு
உப்பு - 
தேவையானளவு
தேசிக்காய் – பாதி 


செய்கை முறை


கோழி இறைச்சி, சிறிதளவு உப்புமிளகாய் தூள  குழைத்து வைக்கவும். 

கறிச்சட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும் (கறிச் சட்டி ஒட்டாத நொன் ஸ்ரிக்காக இருப்பது நல்லது).


எண்ணெய் சூடு ஏறியதும் கடுகை போட்டு வெடித்ததும், பெருஞ்சீரகம், வெந்தயத்தைப் போடவும். 

வெந்தயம் சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்   

பின்பு வெட்டிவைத்த வெண்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் போது,  குழைத்து வைத்த இறைச்சியை சட்டியிலிட்டு பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இடைக்கிடை எரிந்து போகாது இருக்க அகப்பையால் துளாவி விடவும்.

கோழி முக்கால் பதம் பொரிந்ததும் அதற்குள் சரக்கு மிளகாய் தூளையும், கணக்காக உப்பும் போட்டு கொஞ்ச தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய மூடிவிடவும்.

கோழி அவிந்ததும் நெருப்பைக் குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு (நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். 

அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்துவிடவும். 

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். இப்போது கோழிப்பிரட்டல் றெடி.

குறிப்பு  

பெரிய வெங்காயம் நீளமாக வெட்டப் பெற்றவை   
இவற்றுடன் சிலர் உறுளைக் கிழங்கும் சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியோடு போடுவார்கள். 

பாதிக் கிழங்கு போதுமானது. 

உறைப்பு தேவைக் கேற்ப மிளகாய் தூளை கூட்டியும் குறைத்தும் பாவிக்கலாம். 

மசாலைகளை வதக்காது பிறிம்பாக அரைத்தெடுத்து இறைச்சியுடன் போட்டும் சமைப்பார்கள். வினகர் சேர்த்தால் இறைச்சி மெதுமெதுப்பாக இருக்கும். ஆனால் சிலர் விரும்புவதில்லை. 

இஞ்சி ஒரு சிறுதுண்டை சிரியதாய் சீவி அல்லது குத்திப் போட்டும் சமைப்பார்கள் 
இஞ்சி இறைச்சியை மெதுமயானதாக்கும் என்பர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.