கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 27. Dezember 2013

ரவா கேசரி .-2


தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்
சீனி - 1 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 5 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கேசரிப்பவுடர் - தேவையானளவு
முந்திரி பருப்பு (கயூ)- 15-20
முந்திரி வற்றல் (பிளம்ஸ்)  - சிறிதளவு
ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை 

ரவையை 7 நிமிடம் குறைவான சூட்டில் வறுத்து வைக்கவும்.

முந்திரிப் பருப்பையும் ,முந்தரி வற்றலையும் (பிளம்ஸ்)நெய்யில் பொரித்து வைக்கவும்.

3 கப் தண்ணீரில் கேசரிப்பவுடரை நன்றாக கலந்து வைக்கவும்.

சட்டியை அடுப்பில் வைத்து , சட்டி சூடானதும் நெய்யையும் , எண்  ணெயையும் விட்டு அத்துடன் கலந்து வைத்திருந்த தண்ணீரையும் விட்டு கொதிக்க விடவும்.

கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக போட்டு நன்றாக சேரும் வண்ணம் கிளறவும்.

ரவை சேர்ந்ததும், சீனியையும் சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.

சட்டியில் ஒட்டாத பதத்தில் வரும் போது முந்திரிப்பருப்பு, முந்திரி வற்றல், ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

 பட்டர் தடவிய ஒரு தட்டில் பரவி விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
( விரும்பினால் எசென்ஸ் சேர்க்கலாம்.)

குறிப்பு 
நெய்யிற்கு பதிலாக பட்டரை பயன்படுத்தலாம் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.