கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 2. Juni 2014

ரவை சேமியா இட்லி

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப் 
 சேமியா – 1/4 கப் 
 சற்று புளித்த தயிர் – 1 கப் 
 கொத்தமல்லி- சிறிதளவு
 பச்சை மிளகாய்-2 
 இஞ்சி – சிறிது 
 நெய் – 2 டீஸ்பூன் 
 கடுகு – 1/2 டீஸ்பூன்
 உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் 
 கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் 
 மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
 சீரகம் – 1/2 டீஸ்பூன் 
 உப்பு – தேவையான அளவு 
 எண்ணெய் – தேவையான அளவு

 செய்முறை

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 
அதில் நெய் ஊற்றி சூடானதும் 
சேமியா மற்றும் ரவையை வறுத்து
 தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

 பச்சை மிளகாய், கொத்தமல்லி, 
இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில்
 வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், 
அதில் கடுகு, உளுத்தம் பருப்பு , 
கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள், 
பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு 
வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை 
மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும். 

  பிறகு அதோடு தயிர், கொத்தமல்லி, 
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி 
மா பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற 
வைத்து, பின் அதனை இட்லிகளாக 
ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து 
எடுக்க வேண்டும். • இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.