கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 10. Februar 2014

தொதல்

தேவையான பொருட்கள்
பச்சையரிசி-1 சுண்டு
தேங்காய்-5
அல்லது
ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை
ஏலக்காய்ப்பொடி -சிறிதளவு
200 கிராம் கஜு-200 கிராம்
சீனி- 1 கிலோ (4 சுண்டு)
 சவ்வரிசி -3 மேசைக் கரண்டி
பதிலாக
வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்
சக்கரை-250 கிராம்

செய்முறை

அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து
மாவாக எடுத்து கொள்ளவும்.

முழு தேங்காளாயின் துருவி முதல்
பால் தனியாகவும் மற்றைய பாலை
தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர்
 சேர்த்து பிளிந்து எடுக்கவும்.

அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ்
தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன்
கலந்து வைக்கவும்.

பின்னர் வாய் அகன்ற கனமான
பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால்,
சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து
கரைத்து அடுப்பில் வைத்து 2
மணித்தியாலம் வரை கிண்டவும்.

கலவை திரள தொடங்கியதும்
மிகுதியாயுள்ள 6 ரின் தேங்காய்ப்பாலை
 அல்லது முதல்பாலை கொஞ்சம்
 கொஞ்சமாக சேர்த்து கிண்டவும்.

அத்துடன் தூளாக வெட்டிய கஜூவையும்
பொடி செய்த ஏலக்காயையும் போட்டு
கெட்டியாகும் வரை கிளறவும்.

பின்னர் கையில் ஒட்டாத பதம் வந்ததும்
இறக்கி கொட்டி ஆறவிடவும்.

பின்னர் மறுநாள் வெட்டி பரிமாறலாம். 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.