கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 12. Februar 2014

ரவை லட்டு

தேவையான பொருட்கள்

1 சுண்டு ரவை
1சுண்டு சீனி
அரை ரின்பால்
1 சுண்டு தேங்காய் பூ
1 சுண்டு வெள்ளை அரிசி
அரை சுண்டு எள்ளு
50 கிராம் அவிக்காத கோதுமைமா
50 கிராம் ஏலக்காய்

செய்முறை

ரவை, தேங்காய்ப்பூ, எள்ளு 
என்பவற்றை தனித்தனியாக 
வறுத்து எடுக்கவும்.

சீனியை அரைத்து எடுக்கவும்.

பின்னர் வறுத்து எடுத்தவற்றை 
தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.

பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் 
அரைத்த ரவை, அரைத்த சீனி, 
அரைத்த எள்ளு, அரைத்த தேங்காய்பூ, 
ஏலக்காய் பவுடர் போட்டு ரின்பால் 
சேர்த்து நன்றாக கலக்கவும். 
 (உருட்டும் பதம் வரவில்லையென்றால் 
சிறிது கொதிநீர் சேர்க்கலாம்)

பின்னர் அக்கலவையை மிக்சியில் 
போட்டு அரைத்து எடுக்கவும். 

அரைத்து எடுத்தவற்றை சிறு உருண்டை
களாக உருட்டி எடுக்கவும்.

வெள்ளை அரிசியை ஊறவைத்து மாவாக
 அரைத்து எடுக்கவும்.

 பின்னர் அதனுடன் அவிக்காத கோதுமை
மாவையும்  தண்ணீர் சேர்த்து தடித்த 
கலவைபோல் எடுத்து , அவ் உருண்டைகளை 
அவ் மாவில் தோய்த்து எண்ணையில் 
 பொரித்து எடுத்து ஆறியபின்னர் பரிமாறலாம்.  

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.