கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 9. Februar 2014

ஆட்டிறைச்சி - பிரட்டல் கறி

தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ 
நீளமாக வெட்டியபெரியவெங்காயம் – 2 
சிறிதாகவெட்டியசிறிய உருளைகிழங்கு-1 
நீளமாக வெட்டியபச்சை மிளகாய் – 5 
நீளமாக பிளந்து இரண்டாக வெட்டியஉள்ளி: 5 - 6 பற்கள் 
கடுகு,– 1/2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1/2மேசைக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
கறிவேப்பிலை – 2 -3 காம்பு
றம்பை - சிறிதாக வெட்டிய 8-20 துண்டுகள்
எண்ணெய் – தேவையானளவு
மிளகாய்த்தூள் – தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேசிக்காய் – பாதி 
எண்ணெய்: தேவையானளவு

செய்கை முறை:

சுத்தம் செய்து சிறு துண்டுகளாக 
வெட்டியஆட்டிறைச்சியுடன் 
சிறிதளவு உப்பு கறிமிளகாய் 
தூள் ஆகியவற்றை போட்டு  
நன்றாக குழைத்து வைக்கவும். 

கறிச்சட்டியில் எண்ணெயை 
விட்டு சூடாக்கவும் 
(கறிச் சட்டி ஒட்டாத நொன் 
ஸ்ரிக்காக இருப்பது நல்லது).

எண்ணெய் சூடானதும் அதில் 
கடுகை போட்டு வெடிக்க
விடவும் 

அதன் பின்னர் அதில் பெருஞ்
சீரகம், வெந்தயம் ஆகியவற்றை 
போடவும். 

வெந்தயம் சிவந்ததும் அதில் 
உள்ளியை (பூண்டு) சேர்த்து 
வதக்கவும்   

பின்பு வெட்டிவைத்த வெங்காயம்,
 பச்சை மிளகாய் என்பவற்றை 
போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் 
போது குழைத்து வைத்த இறைச்சியை 
சட்டியிலிட்டு பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் 
சட்டியில் உள்ள எண்ணெயிலும் 
அவிந்து பொரிய விடவும். 

 இடைக்கிடை எரிந்து போகாது 
இருக்க அகப்பையால் துளாவி 
விடவும்.

இறைச்சி முக்கால் பதம் பொரிந்ததும் 
அதற்குள் மிளகாய் தூள் சிறு துண்டு
களாக வெட்டிய உருளைக்கிழங்கையும்,
ணக்காக உப்பும் போட்டு கொஞ்ச 
 தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய 
மூடிவிடவும்.

ஆட்டிறைச்சி அவிந்ததும் நெருப்பைக் 
குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு 
(நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். 

அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு 
பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்து
விடவும்.

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச்
 சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். 

இப்போதசுத்தமான சுவையான கோழிப்
பிரட்டல் கறி தயாராகிவிடும் 

குறிப்பு: 

உருளைக்கிழங்கு பெரிதாயின் பாதி 
போதுமானது 

சிலர் உருளைக்கிழங்கு போடுவது 
இல்லை.

 உருளைக்கிழங்கு போட்டால் கறி 
 தடிப்பாக இருக்கும்.  

  மிளகாய் தூளை கூட்டியும் 
 குறைத்தும் பாவிக்கலாம். 

இன்னும் சிலர், மசாலைகளை 
வதக்காது தனியாக அரைத்தெடுத்து 
இறைச்சியுடன் போட்டும் 
சமைப்பார்கள். 

வினிகர் சேர்த்தால் இறைச்சி மெது
மெதுப்பாக இருக்கும். 

ஆனால் சிலர் விரும்புவதில்லை. 

இஞ்சி ஒரு சிறுதுண்டை சிறியதாய் 
சீவி அல்லது குத்திப் போட்டும் 
சமைப்பார்கள் இஞ்சி இறைச்சியை 
மெதுமயானதாக்கும் என்பர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.