கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 14. Februar 2014

மஸ்கெற்

தேவையான பொருட்கள்

750 கிறாம் கோதுமை மா
1 கிலோ சீனி
1/6 லீற்றர் எண்ணெய்
75 கிராம் முந்திரிப்பருப்பு
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)

செய்முறை

கோதுமைமாவை தண்ணீர் சேர்த்து 
கெட்டியாக குழைத்து ஒரு வாய் 
அகன்ற பாத்திரத்தில் வைத்து 
 அதற்குள் நீர் ஊற்றி அதை முதல்
நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் அந்த மாக் கலவையை 
ஊறவைத்த தண்ணீருள் சிறிது சிறிதாக 
சேர்த்து கரைத்து துணியில் வடித்து 
பாலாக எடுக்கவும்.

பின்னர் அடுப்பில் கனமான பாத்திரத்தை 
வைத்து அதனுள் சீனியை போட்டு சீனியை 
உருக விடவும் 

. சீனி நன்றாக உருகியதும் அதனுள் 
அம்மாப் பாலை ஊற்றி கட்டி படாது 
 தொடர்ந்து கிண்டவும்.

கலவை ஒட்டும் பதம் வரும் போது 
எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து 
கிண்டவும் 

திரள தொடங்கும் போது அதனுள் 
முந்திரியை பருப்பு, ஏலக்காய் சேர்த்து 
கெட்டியாக கிண்டவும்.

கலவை ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி 
றேயினுள் கொட்டி பரவி ஆற விடவும். 

மறுநாள் விரும்பிய வடிவத்தில் வெட்டி 
பரிமாறலாம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.