கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 13. Mai 2014

நண்டுக்கறி

தேவையான பொருட்கள்:
நண்டு - 2 பெரியது
தேங்காய் (திருவியது) - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 25
மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு

செய்முறை:
 நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

தாட்சியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.

 வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

 இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும்.

இடையிடையே கிளறி விடவும்.

15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

நண்டில் இருக்கும் தண்ணீ­ர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும்.

இப்போது சுத்தமான சுவையான சத்தான நண்டுக்கறி தயார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.