கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 1. Juni 2014

வெங்காய கார சட்னி

தேவையான பொருள்கள்

 சிறியதாகவெட்டியசின்ன வெங்காயம் -1கப்
பொடியாக நறுக்கியதக்காளி-1-2
பூண்டு-5 பல்
கருவேப்பில்லை -சிறிது
தேங்காய்-2 சில்
உப்பு
எண்ணெய்  ஒரு குழிகரண்டி
சிவப்பு மிளகாய்-5 (காரத்திற்கு ஏற்ப) 
புளி -கொட்டைபாக்கு அளவு
கடுகு-சிறிது
உளுந்தபருப்பு-1 1/2 டேபிள்ஸ்பூன்

 செய்முறை

1)கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் 1 1/2 டேபிள்ஸ்பூன் உளுந்தபருப்பை சிவப்பு மிளகாய் , பூண்டு பொன்னிறமாக வறுத்து அடுப்பை அனைத்து விட்டுஅதே சூட்டில் தேங்காய்ப்பூ புளி , கருவேப்பில்லை சிறிது போட்டு வதக்கவும்.

2)இது ஆறிய உடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.

 3)மறுபடியும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் ,மற்றும் தக்காளி போட்டு வதக்கி, இது ஆறிய உடன் மிக்சியில் அரைத்து .முதலில் அரைத்து வைத்து உள்ள உளுந்தபருப்பு, தேங்காய் கலவை உடன் உப்பு,தேவையான நீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

 4)கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை  போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்,

 5)வெங்காயம் நன்றாக வதக்கியதும் இந்த கலவையை சட்னி உடன் கலந்து விடவும்.. 

6)சின்ன வெங்காயம் போட்டு வதக்கி சேர்ப்பது சாப்பிடும் போது நன்றாக இருக்கும். 

7)சின்ன வெங்காயம் நறுக்க நேரம் இல்லை என்றால் தவிர்த்து விடலாம் 

8)அல்லது ஒருமுறை வெறும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தும்,

9)மற்றொரு முறை சின்ன வெங்காயம் வதக்கியும் செய்து பாருங்கள் ,சுவையில் வித்தியாசம் தெரியும்

. இட்லி,தோசை உடன் சாப்பிடலாம் .   

குறிப்பு 

1)அனைத்து பொருள்களும் எண்ணையில் வதக்கி அரைத்து வைத்து இருப்பதால் ,மீண்டும் கொதிக்க வைக்க தேவை இல்லை.தாளித்து மட்டும் சேர்த்தால் போதும்,

 2)இதில் பாதி உளுத்தம்பருப்பு ,பாதி கடலைபருப்பு பொன்னிறமாக வறுத்தும், உளுத்தம்பருப்புக்கு பதிலாக கடலைபருப்பு சேர்த்தும் செய்யலாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி செய்து பாருங்கள்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.