கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 17. Oktober 2010

அப்பிள் ரசம்



நாம் தினமும் ஓர் அப்பிள்பழத்தை
சாப்பிட்டு வந்தாள் நாம் தினமும்
சாப்பிடும் அந்த அப்பிள் பழமானது
எமக்கு நோய் ஏற்படாது எங்களை
காக்கும்.அத்துடன் எமக்கு நோய்
ஏற்பட்டால் நோயிடம் இருந்து
எம்மைகாக்கும் மருத்துவரைகூட
தூரத்தில் வைக்கும் சக்தி அப்பிள்
பழங்களுக்கு உண்டு.அத்துடன்
அப்பிள் பழங்களுக்குப் பலவித
மான புற்றுநோய்களைத் தடுக்கும்
ஆற்றல் உள்ளது இதயநோய்கள்
எடைக்குறைவு கொழுப்புச்சத்துக்
குறைவு ஆகியவற்றிற்கும் அப்பிள்
பழம் உதவுகிறது. அப்பிள்பழம்
நோய்களிலிருந்துமூளையை
பாதுகாக்கின்றன. அப்பிள்பழம் உயிர்
சத்து சி நிறைந்தது இப்படிப்பட்ட
அப்பிள்பழத்துடன் புரதசத்து நிறைந்த
பருப்பும் சேர்ந்து செய்யப்பட்ட ரசமே
அப்பிள் ரசமாகும்.
தேவையான பொருட்கள்
பருப்பு -1கப்
தண்ணீர் - 1கப்
அப்பிள்பழம் - 1
தக்காளி - 2
தேசிக்காய்(எலுமிச்சைச்)சாறு - 1மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
பெருங்காய்த்தூள் - 1/4தேக்கரண்டி
மிளகு - 1+1/2தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
செத்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையானளவு
கடுகு - 1/2தேக்கரண்டி
நெய் - 1மேசைக்கரண்டி
செய்முறை
1.முதலில்ஆப்பிளை தோல், விதை 
   ஆகியவற்றைஅகற்றி ய பின்னர்
   சிறிய சிறிய துண்டுகளாக 
   வெட்டுங்கள்.
2.அதன் பின்னர் தக்காளிப்பழத்தை 
   கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு 
   அரைத்து வடிகட்டவும்.
3. பின்னர் ஒரு பாத்திரத்தில் பருப்பு ,
    தண்ணீர் ஆகியவற்றை போடவும்.

4.போட்டபின்னர் அதனுடன் அரைத்து
    வைத்திருக்கும் தக்காளிப்பழத்தை 
   போட்டு நன்றாக கலக்குங்கள்.
5.கலக்கிய பின்னர் அதனுடன் தண்ணீர் 
   ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்
   தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக 
   கலக்குங்கள்.
6.பின்பு மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், 
   கறிவேப்பிலை ஆகியவற்றை
   தூளாக்கி   கொள்ளவும்.
7.அடுப்பிள் தாட்சியை வைத்து 
   சூடாக்கவும்.

8.சூடாக்கிய பின்னர் அதில் நெய்யை 
   விட்டு சூடாக்கவும்.

9. நெய் சூடான பின்னர் அதில் கடுகு, 
    கறிவேப்பிலை ஆகியவற்றை 
    போட்டு தாளிக்கவும்.    
     
10.தாளித்த பின்னர் அதனுடன் ஆப்பிள் 
   துண்டுகளையும் சேர்த்து 3 நிமிடங்கள் 
   வதக்கவும்.

11. வதக்கிய பின்னர் அதனுடன் 
   ஏற்கனவே செய்துவைத்திருக்கும் 
   கலவையை சேர்த்து கலக்குங்கள் .
12.கலக்கிய பின்னர் கொதிக்க விடுங்கள்.

13.கொதித்து இக்கலவை பொங்கி வரும்
      போது தேசிக்காய் (எலுமிச்சை) சாறு 
    சேர்த்து அடுப்பிள் இருந்து இறக்குங்கள்.
14.அதன் பின்னர் இதோ சுத்தமான சுவை
     யான சத்தான அப்பிள் ரசம் தாயாராகி
     விட்டது. 
     
15.தயாரான பின்னர் ஒரு தட்டில் 
    சோற்றினை வைத்து அதனுடன் 
   சுத்தமான சுவையான சத்தான அப்பிள்
   ரசத்தை வைத்து பரிமாறுங்கள்.
குறிப்பு
எச்சரிக்கை
அப்பிள்பழ அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.