கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 17. Oktober 2010

இஞ்சித்தொக்கு


இஞ்சி (Zingiber officinale) உணவின் ருசி கருதி உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இஞ்சி ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சியை உண்பதால் தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக்கம்மல் ஆகும். ஆகவே அதில் செய்யப்படும் இஞ்சி தொக்கினை சுவையை அறிய இதனை செய்து சாப்பிடவும்.


தேவையான பொருட்கள் 
இளசான இஞ்சி - 100கிராம்
மிளகாய்த்தூள் - 6 தேக்கரண்டி
புளி - தேசிக்காயளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு


செய்முறை 

1 .கிரைண்டரில்(மிக்சியில)தோல் நீக்கி
     சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய
     இஞ்சியுடன் உப்பு, புளி மிளகாய்த்தூள்
    ஆகியவற்றை போட்டு நன்றாக சேர்த்து
    அரைக்கவும்.

2,அதன் பின்பு அடுப்பில் தாட்சி வைத்து
   (வாணலி வைத்து) கடுகு, பெருங்காயம்
   தாளித்து அதனுடன் அரைத்த விழுதை
    போட்டு வதக்கவும்.

3.அவை வதங்கியதும் சுத்தாமான
    சுவையான மருத்துவகுணமுடைய
    சத்தான இஞ்சிதொக்கு தயாராகிவிடும்.

4அதன் பின்பு அதை எடுத்து ஒரு
   பாத்திரத்தில் போடவும்

5.அதன் பின்னர் ஒருதட்டில் சோற்றினை
   (சாதத்தை )வைத்து அதனுடன்
   இஞ்சி தொக்கினை வைத்து பரிமாறவும்

 அல்லது 
ஒரு சுத்தமான தண்ணிர் இல்லாத காய்ந்த
போத்தலில் போட்டு காற்றுப் போகாதவாறு
நன்றாக முடி வைக்கவும்.

நெல்லிக்காய் ஊறுகாய் பரிமாற தேவைப்படும்
போது போத்தலின் மூடியை அகற்றிய பின்னர்
சுத்தமான ஈரமற்ற கரண்டியால் அல்லது
சுத்தமான ஈரமற்ற மர அகப்பையால் எடுத்து
வைத்து பரிமாறவும்


எச்சரிக்கை -
1.மரவள்ளி கிழங்கு உணவுகளை சமைக்கும் போது
அல்லது சாப்பிடும்போது இஞ்சி உணவுகளை
சமைக்கவோ அல்லது சாப்பிடகூடாது.

2.மரவள்ளி கிழங்கு,இஞ்சி ஆகிய இவையிரண்டும்
  சேர்ந்தால் மரவள்ளிக் கிழங்கு   கறி நஞ்சாகிவிடும்
( மரவள்ளி கிழங்கிலுள்ள பால் இஞ்சியுடன்
சேர்ந்தால் நஞ்சாகிவிடும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்-
தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக
நறுக்கிய இஞ்சி.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.