கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 16. Oktober 2010

நெல்லிக்காய் தொக்கு


நெல்லிக்காயில் விற்றமின் சி, கல்சியம் 
ஆகியவை மிக மிக நிறைந்ததுள்ளது 
அத்துடன் உங்கள் சருமத்தை பளபள
வென்று மாற்றும் இளமையை அதிகரிக்க 
செய்யும்ஒரு தேவலோகத்து கனி
அப்படிப்பட்ட நெல்லிக்காயில்செய்யப்படும் 
தொக்கின் சுவையெப்படியிருக்கும் என்பதை 
நீங்களே செய்து சாப்பிட்டு அறிந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள் 
பெரிய நெல்லிக்காய் - கால்கிலோ
மிளகாய்த்தூள் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 150 கிராம்
உப்பு - தேவையானளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி

செய்முறை 

1.அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
   பெரிய நெல்லிக்காய் தண்ணீர் ஆகியவற்றை
   போட்டு அவியவிடவும் .

2. நெல்லிக்காய் அவித்த பின்னர் அதனை
    எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்

3.போட்டபின்னர் ஆறவிடவும்

4. ஆறியபின்னர் அதனை கத்தியால் வெட்டி
     அதனுள் உள்ள  விதையை  நீக்கவும்.

5.அதன் பின்பு அவித்து விதை நீக்கிய பெரிய
   நெல்லிக்காய், உப்பு, மிளகாய்த்தூள்
   இவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்)
   விழுதாக அரைக்கவும்.

6.அரைத்த   பின்னர் அடுப்பில் தாட்சியை
     (வாணலியை) வைத்து அதை சூடாக்கவும்.

7.பின்பு தாட்சி(வாணலி) சூடானதும்
  நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்

8.சூடாக்கிய பின்னர் அதில் கடுகு போட்டு
   வெடிக்க விட்டு சீரகம்(சோம்பு), பெருங்காயம்
   ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

9.தாளித்த பிறகு விழுதாக அரைத்தவற்றை
  போட்டு கிளறவும்.

10.அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
    நெல்லிக்காய் தொக்கு தயாராகிவிடும்

11.தயாரான பின்னர் அதனை அடுப்பில் இருந்து
    இறக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்

12.போட்ட பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
   (சாதத்தினை ) வைத்து அதனுடன் சுத்தமான
    சுவையான சத்தான நெல்லிக்காய் தொக்கினை
     வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை - 
பெரிய நெல்லிக்காய் அலர்ஜி
உள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.