கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 16. Oktober 2010

புடலங்காய் ஊறுகாய்

 புடலங்காய் ஊறுகாய் மினரல் சத்து
நிறைந்தது இது ஆசியா கண்டத்தினை
சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களால்
பெரும்பாலும் விரும்பி உண்ணப்படும்
உணவு இதுவாகும்


தேவையானபொருட்கள் 
பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் - 2
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடியளவு
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
செத்தல் மிளகாய் (வத்தல்) - ௨


செய்முறை 
1.அடுப்பில் வாணலியை (தாட்சியை)
   வைத்து அதை சூடாக்கவும்.

2.அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
   விட்டு சூடானதும் நறுக்கிய புடலங்காயை
  அதில் போட்டு வதக்கிக் கொள்ளவும் .

3.புடலங்காய் வதங்கியதும் அதை எடுத்து
  ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்

4.திரும்பவும் அடுப்பில் வாணலியை
   (தாட்சியை)வைத்து அதை சூடாக்கி
   அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
   விட்டு அதை சூடாக்கவும்.

5.அதில் துவரம் பருப்பு, பெருங்காயம்,
   மிளகு, செத்தல் மிளகாய் போட்டு
  பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும்.

6.ஆறிய பின்பு பொன்னிறமாக வறுத்த
   துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகு,
   செத்தல் மிளகாய் ஆகியவற்றை
   கிரைண்டரில் (மிக்ஸியில்)போட்டு
   கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் .

7.அதனுடன் வதங்கிய புடலங்காயை
   சேர்த்து நைசாக அரைக்கவும்.

8.இதோ சுவையான புடலங்காய்
   ஊறுகாய் தயாராகி விட்டது.

9.அதன் பின்பு இதை பரிமாறவும்.

எச்சரிக்கை - 

புடலங்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.