கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 5. Oktober 2010

கறிவேப்பிலை துவையல்-1

கறிவேப்பிலை என்பது  கறியில் போடும் இலை
அத்துடன் இதனுடைய இலையின் தோற்றம்
வேப்பிலையின்  தோற்றத்தை ஒத்தது ஆகும் .
(கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை)
இந்த இலையை தினமும் உணவுடன் சேர்த்து
சாப்பிட்டால் தலைமயிர்(முடி )கொட்டாமல்
நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரவும்,
கண்பார்வை பிரகாசமாக தெரியவும் , இரத்த
கொதிப்பு நோய் குறையவும், சர்க்கரை நோய்
குறையவும் கறிவேப்பிலை உதவும் ஆகவே
உடனடியாக கறிவேப்பிலை துவையல்
 செய்து உண்பதே சால சிறந்தது.

தேவையான பொருட்கள் 


கறிவேப்பிலை (உருவிய) - 2 கப்
பச்சைமிளகாய் - 4
உப்பு - தேவையானளவு
உள்ளி (பூண்டு) - ஒரு பல் (விரும்பினால் )
வெங்காயம் - தேவையானளவு
தேங்காய்ப்பூ - தேவையானளவு
தேசிக்காய்ச்சாறு(லைம்ஜூஸ்) - சிறிதளவு


செய்முறை 

(1)கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் உருவி கழுவிய
     கறிவேப்பிலை,பச்சைமிளகாயை உப்புடன்,உள்ளி,
    வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

(2)அதன் பின்பு அரைத்தவற்றுடன் தேங்காய்ப்பூவையும்
      சேர்த்து அரைக்கவும்.

(3)எல்லாவற்றையும் நன்றாக அரைத்த பின்னர்
    இதனுடன் தேசிக்காய்ச்சாறு (லைம் ஜுஸ்)
    சேர்க்கவும்.

(4)அதன் பின்னர் சுவையான சுத்தமான சத்தான
     கறிவேப்பிலை துவையல் தயாராகி விடும்.

(5)அதன் பின்னர் ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை)
    அல்லது இடியப்பம்,தோசை ,பாண் இவற்றில் ஒன்றை
    வைத்து அதனுடன் கறிவேப்பிலை துவையலையும்
    வைத்து பரிமாறவும் .

மாற்றுமுறை 
தேங்காய்ப்பூ சாப்பிட கூடாதவர்கள் தேங்காய்ப்பூவிற்கு
பதிலாக உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி (ஒரளவுவறுத்து),
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி(ஒரளவுவறுத்து)சேர்த்து
அரைக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.