கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 5. Oktober 2010

குடைமிளகாய்(கறிமிளகாய்) சலாட்.


    கேன்சரை வரவிடாமல் தடுக்கும் சக்தி 
    பல நிறமுடைய குடைமிளகாய்
    (கறிமிளகாய்)சலாட்டிக்கு உண்டு. 

    தேவையான பொருட்கள் 
    நறுக்கிய பச்சை மிளகாய் - 4
    தயிர் - 2 கப்
    குடைமிளகாய் (கறிமிளகாய்) - ஒரு கப்
    (பச்சை, மஞ்சள், சிவப்பு (சிறிய துண்டுகளாக 
    வெட்டி எல்லாம்சேர்த்து))
    நறுக்கிய இஞ்சி - அரை தேக்கரண்டி
    கடுகு - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு 
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை
    பாதி வெங்காயம் - 1

    செய்முறை 

    (1)அடுப்பில் தாச்சியை (வாணலியை )
         வைத்து சூடாக்கவும் .

    (2)தாச்சி(வாணலி) சூடானதும் அதில் 
        எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும் 
    (3)எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகு, 
         சீரகம், வெங்காயம் ஆகியவற்றை 
         போட்டு தாளிக்கவும் .

    (4)அதன் பின்பு அதனுடன் குடைமிளகாய்
       (கறிமிளகாய்), இஞ்சி பச்சை மிளகாய் 
      ஆகிய மூன்றையும் போட்டு வதக்கவும்.

    (5)வதக்கிய பின்பு அதில் மஞ்சள்தூள், 
        மிளகுத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் 
        போட்டு வதக்கவும். பின்பு ஆறவிடவும்

    (6)இவையாவும் ஆறியதும் இந்தக்
        கலவையை தயிருடன் கலந்து ஒரு மணி 
        நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரிட்ஜில் 
         வைக்கவும்.

    (7)அதன் பின்பு செய்தவற்றை ஃப்ரிட்ஜில் 
         இருந்து வெளியில் எடுத்து அதில் 
        கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும் 

    (8)அதன் பின்னர் சுத்தமான சுவையான 
        பல வர்ண நிறமுடைய குடைமிளகாய் 
      (கறிமிளகாய்)சலாட் தயாராகி விடும் .

    (9)ஒரு தட்டில் சாதம்(சோறு)வைத்து 
       அதனுடன் வேறு கறிகளை வைத்து 
        அவற்றுடன் இந்த சலாட்டினையும் 
       வைத்து பரிமாறவும்.


    "மிக மிக முக்கிய குறிப்பு" 

    (1)குடைமிளகாய்சலாட்டில் இஞ்சி 

       சேர்த்திருப்பதால் இதனுடன் அல்லது 

      இதனை சாப்பிட்ட பின்னர் மரவள்ளி 

       கிழங்கு சாப்பிட கூடாது 

     (2)(இஞ்சி + மரவள்ளிக்கிழங்கு இரண்டும் சேர்ந்தால்
    நஞ்சு(ஆபத்து).

     குடைமிளகாய்(கறிமிளகாய்) கேன்சரை
    வரவிடாமல் தடுக்கும் பல வர்ண சாலட்.  

    Keine Kommentare:

    Kommentar veröffentlichen

    Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.