கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 4. Oktober 2010

கடலைவடை (மசாலவடை)

கடலைப்பருப்பில் கார்போவைதரேட், சீனி
(சர்க்கரை)நார்சத்துக்கள், கொழுப்பு, புரதம், 
நீர், விற்றமின் A,B1,B2, B3,B5,B6,B9,B12,C,E,K, 
கல்சியம், இரும்பு, மக்னீசியம், பொஸ்பரஸ், 
பொட்டாசியம்,சோடியம் போன்ற பலதரப்பட்ட  
சத்துக்கள் காணப்படுகிறது. இப்படிப்பட்ட 
கடலைப் பருப்புடன் மினரல் சத்தும், சுவையும் 
சேர்ந்து காணப்படுவதே கடலை வடை ஆகும் 
இதனை  மசால வடை என்றும் அழைப்பார்கள்
இப்படியான சத்துகளையும் பெயரினையும் 
உடைய  இந்த வடையை செய்து சாப்பிட்டு இதன் 
சுவையை அறியவும்.

தேவையான பொருட்கள் 

கடலைப்பருப்பு - ஒரு சுண்டு
பெருஞ்சீரகம்(fennel) - (1- 2) மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம்(பெரியது)(சிறியதுண்டுகளாகநறுக்கியது) - 1
பச்சைமிளகாய் (சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு) (நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறியதுண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர் (நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 

(1)ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு 
      கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் 
      ஒரளவு கொதித்த நீரை (நகச்சூடு) விடவும் 
     (கடலைப் பருப்பை விட தண்ணீர் கூடுதலாக 
      இருக்கவேண்டும்).

(2)பின்பு பாத்திரத்தில் போட்ட கடலைப்பருப்பை 
      ( 1 - 2)மணித்தியாலம் ஊறவிடவும். 

(3)கடலைப்பருப்பு ஊறியபின்பு கடலைப்பருப்பில் 
    உள்ள தண்ணீரை வடித்து விடவும்.

(4)தண்ணீர் வடித்து விட்ட பின்பு ஊறிய கடலைப்
    பருப்பை  எடுத்து மூன்றாக பிரித்து மூன்று 
    பாத்திரத்தில்  போடவும்(முதலாவது பாத்திரத்தில் 
   கொஞ்சமாகவும், இரண்டாவது மூன்றாவது ஆகிய 
   பாத்திரங்களில் முதலாவதின் இரண்டு மடங்காகவும்).


(5)அதன் பின்பு மூன்றாவது பாத்திரத்தில் உள்ள 
     கடலைப் பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில்
      (மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு 
      தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்)(தடிப்பான 
      பசை போல).

(6)பின்பு அதனுடன் உப்பைசேர்த்து அரைக்கவும் 
    சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக 
    கலக்காது).

(7)அதன் பின்பு இரண்டாவதாக உள்ள பாத்திரத்தில் 
     உள்ள கடலைப் பருப்பை எடுத்து கிரைண்டரில் 
      அல்லது மிக்சியில் போட்டு ஓரளவு அரைக்கவும்
       (கொற கொறவென அரைக்கவும் ) .

(8)அரைத்த யாவற்றையும்   ஒரு பாத்திரத்தில் 
        போடவும். 

(9)பின்பு மூன்றாவதாக அரைத்த கடலைப்பருப்பு 
     உள்ள பாத்திரத்தில் அதனுடன் இரண்டாவதாக 
     அரைத்த கடலை பருப்பை போட்டு நன்றாக 
     கலக்கவும்.

(10)கலந்த பின்பு அதனுடன் முதலாவதாக எடுத்து 
       வைத்திருக்கும் கடலைப்பருப்பை போட்டு 
       நன்றாக கலக்கவும்.

(11)இவையாவற்றையும் நன்றாக கலந்தபின்பு 
      இதனுடன் சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய 
      வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, 
      (நசுக்கிய)உள்ளி(பூண்டு),(நசுக்கிய)இஞ்சி, 
      பெருஞ்சீரகம்(fennel), கடுகு ஆகியவற்றை போட்டு
       கலக்கவும்.

(12)கலந்தபின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)
       வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய்விட்டு 
       நன்றாக கொதிக்கவிடவும்.

(13)அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம்
       கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி 
       அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு 
       தட்டவும்.

(14)கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும்

(15) இப்படியே வடைகளில் சிலவற்றைச் செய்து 
       கொதித்த எண்ணையில்  போட்டு ஓரளவு 
       மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.

(16)ஓரளவு மஞ்சள் நிறமாக  பொரிந்த வடைகளில் உள்ள 
         எண்ணெயை வடித்து விட்டு அதை சூட்டுடன் ஒரு 
         பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும்
        (வடையின் உட்பகுதி நன்றாக அவிவதற்காக அப்படி 
        செய்யாவிட்டால் வடையின் உட்பகுதி நன்றாக 
        அவியாது).

(17)இப்படியே தேவையான எல்லா வடைகளையும் 
       செய்து ஒரு பாத்திரத்தில்  போட்டு மூடிவைக்கவும்.

(18)எல்லா வடைகளையும் செய்து முடித்த பின்பு 
      அவை யாவற்றையும் எடுத்து திரும்பவும் 
      கொதித்த  எண்ணெயில் போட்டு நல்ல பொன்
      நிறமாக பொரிக்கவும்.

(19)அதன் பின்பு பொரித்த வடைகளில் உள்ள 
       எண்ணெயை வடித்துவிட்டு அதை ஒரு 
      பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

(20)அப்படிச் செய்த பின்பு சத்தான சுவையான 
    கடலை வடை(மசாலவடை) தயாராகிவிடும்.

(21)பின்பு செய்து வைத்துள்ள வடைகளில்  
       சிலவற்றை எடுத்து ஒருசிறிய தட்டில் 
       வைத்து அதனுடன் சட்னி,துவையல் 
      அல்லது வாழைப்பழத்தை வைத்து 
     பரிமாறவும்.

எச்சரிக்கை - 

கடலைப்பருப்பு அலர்ஜி உடையவர்கள், இருதய
நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

மாற்று முறை - 
1 .கடலைப்பருப்புடன் கபேஜ்(கோவா)சேர்த்தும்
     செய்யலாம்,
2 .கடலைவடைக்கு (மசாலவடைக்கு)உள்ளி,
    இஞ்சி போடாமலும் செய்யலாம்
3 .நீங்கள் விரும்பினால் இந்த வடைக்கு சீரகம்
     (சின்னசீரகம்) அரைகால் தேக்கரண்டி சேர்க்கலாம்.
4 . கடலை வடைக்கு அரைத்து டீபிரீஸரில்  வைத்து
    விட்டு பின்பு தேவையானநேரத்தில் டீபிரீஸரில்
    இருந்து அதை வெளியில் எடுத்து சிறிது நேரம்
    வெளியில் வைத்து குளிரை அகற்றிய பின்பு
    தேவையான வடைகளை செய்து பொரித்து
    எடுக்கலாம்.
5. அல்லது வடையை பொரித்த பின்பு அதனை
    ஆறவிடவும். வடைகள் யாவும் ஆறிய பின்பு
    அந்த வடைகளை எடுத்து ஒரு பொலித்தீன்
    பையில் போட்டு மூடி டீபிரீஸரில் அதனை
    வைத்து விட்டு வடை தேவையான நேரத்தில்
    தேவைப்படும் வடைகளை பிரீஸரில் இருந்து
    வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து
    அவற்றை சிறிது நேரம் வெளியில் வைத்து
    குளிரை அகற்றிய பின்பு மைக்ரோ அவனில்
    வைத்து சூடாக்கி உண்ணலாம் .

கவனிக்க வேண்டிய விசயங்கள் - 
 1 .வடையின் உள்ளே  நன்றாக அவிந்து விட்டதா
     என்பதை கவனிக்கவும்,
2 .வடை மாவில் வெங்காயம் சேர்த்தவுடன்
    வடையை  பொரிக்கவும் (அதிக நேரம்
   வைத்திருக்ககூடாது வைத்திருந்தால்
   வெங்காயத்தினுள் உள்ள  நீர்வெளியேறி
   வடையை பழுதாக்கிவிடும்)
3 .அரைத்த வடைமாவை கலக்கும் போது
    3வது, 2வது, 1வது என்ற முறைப்படி
    கலக்கவும்(எல்லா வடை மாவும்
    நன்றாக கலப்பதற்காக),
4 .வடையில் தேவையான உப்பு நன்றாக
   சேர்ந்து விட்டதா என கவனிக்கவும். 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.