தேவையான பொருட்கள்
மாங்காய் (துருவியது) - 2 கப்
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் (துருவியது) -1 கப்
பச்சை மிளகாய் - 10
மிளகு - 1 /2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை
1 .கிரைண்டரில்(மிக்சியில்)துருவிய
தேங்காய் , பச்சைமிளகாய் , கடுகு
ஆகியவற்றை போட்டு ஒன்றிரண்
டாக அரைக்கவும் .
2 .அதன் பின்பு ஒரு பாத்திரத்தில்
துருவிய மாங்காய் ,உப்பு ,
பெருங்காயம்,எண்ணெய் ஒரு
தேக்கரண்டி,அரைத்தவைகள்
ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும் .
3 .அதன்பின்பு அடுப்பில் வாணலியை
(தாட்சியை)வைத்து எண்ணெய்
விட்டு சூடாக்கிய பின்பு அதில்
கடுகை போட்டு தாளிக்கவும் .
4 .கடுகை தாளித்த பின்பு அதனை
எடுத்து அதனை ஏற்கனவே
கலந்து வைத்திருப்பவைகளுடன்
சேர்த்து கலந்து பரிமாறவும் .
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.