கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 11. November 2010

இலங்கை மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு(ஆள்வள்ளி கிழங்கு)
கறி மிகவும் சுலபமாக செய்ய கூடியதும் .
சுத்தமானதும் சத்தானதும் ஆகும்.

தேவையான பொருட்கள் 
மரவள்ளிக்கிழங்கு - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - சிறிதளவு
பால் - 4 மேசைகரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1மேசைகரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு


செய்முறை 

மரவள்ளிக் கிழங்கினை தோல் உரிக்கவும்.

அதன் பின்னர் அதன் நடுவில் உள்ள
வேரினை வெட்டி எடுக்கவும்

பின்னர் தேவையானளவு சிறு சிறு
துண்டங்களாக வெட்டவும்

அதன் வெட்டிய துண்டுகளை ஒரு
பாத்திரத்தில் போடவும்.

அதன் பின்னர் அவற்றை நன்றாக
கழுவி வைக்கவும்.

அதன் பின்னர் வெவ்வேறு பாத்திரங்களில்
வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை
சின்னதாக அரிந்து வைக்கவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து
எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகியதும் அதில் கடுகு, சோம்பு
போட்டு வெடிக்க விடவும்

அவை வெடித்ததும் அதனுடன் வெங்காயத்தை
போட்டு பொரிய விடவும்

அதன் பின்பு அவற்றுடன்  மரவள்ளிக்கிழங்கு,
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் என்பவற்றை
போட்டு பிரட்டி ஒரளவு தண்ணீர் விட்டு அவிய
விடவும்

கிழங்கு அவிந்ததும் அதனுடன் உப்பு,
கறிவேப்பிலை போட்டு பிரட்டவும்.

 பின்பு அதனுள் பால் விட்டு கிளறி, 5 நிமிடம்
மெல்லிய தீயில் மூடி வைக்கவும்.

வைத்த பின்பு சுத்தமான சுவையான சத்தான
மரவள்ளிக் கிழங்கு கறி தயாராகிவிடும்

அதன் பின்னர் அடுப்பில் இருந்து அவற்றை
இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாத்தத்தை) அல்லது இடியப்பத்தை,
புட்டினை வைத்து அதனுடன் சுத்தமான
சுவையான சத்தான மரவள்ளிக் கிழங்கு
கறியை வைத்து பரிமாறவும்

எச்சரிக்கை 
தயவு செய்து இஞ்சி சேர்க்க வேண்டாம்.
இதை செய்து சாப்பிடும் நாட்களில்
இஞ்சி சாப்பாடு எதுவும் சாப்பிட வேண்டாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.