கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 6. November 2010

முளைக்கீரை கறி


முளைக்கீரை நார் சத்து நிறைந்த ஓர்
உணவு பொருள்.
தேவையான பொருட்கள் 
முளைக்கீரை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம் (சோம்பு )- கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - கால் தேக்கரண்டி
பால் - ஒரு கப்
உள்ளி - 4 பல்
வெங்காயம் - அரைப்பாகம்


செய்முறை 
முளைக்கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக
நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி
யினையோ  அல்லது பாத்திரத்தினையோ
வைத்து அதில் கழுவிய முளைக்கீரை உள்ளி
(பூண்டு) ஆகியவற்றை போட்டு அவிய
விடவும்.

முளைக்கீரை ஓரளவு அவிந்ததும் அதனுடன்
பச்சை மிளகாயை  (நீளவாக்கில்) வெட்டி
போடவும்.

இவையாவும் ஒரளவு அவிந்ததும் பால்
விடவும்.

அதன் பின்னர் உப்பு சேர்த்து பின்பு நன்றாக
அவியவிடவும்.

வெந்ததும் அப்பாத்திரத்தை அடுப்பில்
இருந்து இறக்கவும்

இறக்கிய பின்னர் அவிந்த முளைக்கீரையை
மத்தால் அல்லது மரஅகப்பையால்
 மசிக்கவும்.

மசித்த பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து
அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

அதன் பின்னர் அதில் கடுகு,பெருஞ்சீரகம்,
 வெங்காயம் ஆகியவற்றை தாளிக்கவும்,

தாளித்த பின்னர் தாளித்தவற்றை மசித்த
கீரையில் போடவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
முளைக்கீரை கறி தயாராகிவிடும்


அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன் சுத்தமான
சுவையான சத்தான முளைக்கீரை கறியை
வைத்து பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
வெந்ததும் மத்தால் மசிக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.