கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 6. November 2010

பீட்ரூட் இலை வறை

பீட்ரூட் இலை வறுவல் கார்போவைதரேட்,
கொழுப்புசத்து, புரதசத்து, இரும்புசத்து,
உயிர்சத்து A,B1,B2B3,B5,B6,B9,C,பொட்டாசியம்,
பொஸ்பரஸ்,மக்னீஸியம்,சோடியம்,கல்சியம்
ஆகியசத்துக்கள் நிறைந்த ஒர் உணவுப்பொருள்
ஆகும் அத்துடன் இது சுத்தமானது சுவையானது
சத்தானது


தேவையான பொருட்கள்  
குறுணியாக வெட்டியபீட்ரூட் இலை - 1கட்டு
உப்பு - தேவையானளவு
குறுணியாக  வெட்டியபெரிய வெங்காயம் - 1
தேசிக்காய்ச்சாறு (லைம்(லெமன்)ஜூஸ்) - சிறிதளவு
குறுணியாக வெட்டியபச்சைமிளகாய் - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - தேவையான அளவு
மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி


செய்முறை 
 ஒரு பாத்திரத்தில்குறுணியாக  வெட்டி
கழுவிய பீட்ரூட் இலைகளை போட்டு
வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து அது சூடாகியதும் தாட்சியில்
(வாணலியில்)எண்ணெய் விட்டு அது
கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம்,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்னர் அதனுடன்  குறுணியாக
வெட்டி கழுவிய பீட்ரூட் இலைகளை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.
.
அது ஒரளவு பொரிந்த  பின்பு அதனுடன்
மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பூ
ஆகியவற்றை சேர்த்து கலந்து சிறிது
நேரம் பொரிய விட வேண்டும்.

அதன் பின்பு இவற்றுடன் தேசிக்காய்ச்
சாறு(லெமன்)ஜூஸ்) சேர்த்து கலக்கி
நன்றாக பிரட்ட வேண்டும்.

எல்லாம் கலந்து பிரட்டிய  பின்பு 2
நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு
இறக்கவும் .

இறக்கிய பின்னர் சுத்தமான சுவையான
சத்தான பீட்ரூட் இலை வறை தயாராகி
விடும்.

தயாரான பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை) வைத்து அதனுடன் சுத்தமான
சுவையான சத்தான பீட்ரூட் இலை வறையை
வைத்து பரிமாறவும் .

எச்சரிக்கை 
இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ண
வேண்டும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.