கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 13. November 2010

அச்சாறு

கரட், பப்பாசிக்காய், போஞ்சிக்காய் ஆகிய
காய்களில் அச்சாறு தயாரிக்கப்படுகின்றன.
அச்சாறு கார்போஹைட்ரேட், கொழுப்பு,
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து (A,B1,
B2,B3,B6,C,D) பொட்டாசியம், பொஸ்பரஸ்,
மக்னீசியம்,சோடியம், கல்சியம் ஆகியவை
நிறைந்த ஒர் உணவு பொருள்.


தேவையானபொருட்கள் 
பச்சைமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
பப்பாசிக்காய் - 125 கிராம்
போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
கரட் - 125 கிராம்
வினிகர் - 3 கப்
செத்தல் மிளகாய் - 5
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 5 பல்
2 இன்ச் நீளத்துண்டுஇஞ்சி - 1
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயம் - 1துண்டு

செய்முறை 
கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு
ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி
வினிகர் சேர்த்து மென்மையாக
அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது
போல அரைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி
கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.

போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி
துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3")
துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின்
தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக
வெட்டி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின்
காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி
நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி
அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து
அதில் அரை கப் வினிகரை ஊற்றி
அதனுடன் விதை நீக்கிய பச்சை
மிளகாயை போட்டு அவிய விடவும்.

பச்சைமிளகாய் அவிந்து வினிகர்
வற்றியதும் அதிலிருக்கும் பச்சை
மிளகாயை வேறு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரை கப்
வினிகரை ஊற்றி வெங்காயத்தை
போட்டு அவித்து வினிகர்வற்றியதும்
 எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி கரட்டை போட்டு அவித்து
வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை
 ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து
வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில்
விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த கரட்டை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள்,
மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து
இறக்கி அதை ஆற விடவும்.

அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில்
போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
அச்சாறு தயராகிவிடும்

அதந பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) ,தயிர் சாதத்திணை அல்லது
சப்பாத்தி ஆகியவற்றை வைத்து அதனுடன்
 அச்சாறு சிறிதளவு வைத்து பரிமாறவும்



 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
அச்சாறை நீண்ட காலத்திற்கு வைத்து
பயன்படுத்தலாம்.
ஈரக்கரண்டியை அச்சாறு போத்தலினுள்
போட்டு அச்சாறினை எடுத்தால் அது
பழுதடைந்து விடும்.


மாற்று முறை 
மரக்கறிவகைகளை நீராவியில் அவித்
தெடுத்து பின்பு அரை கப் வினிகர்
விட்டு கரைத்த கூட்டில் இட்டு அவித்து
கொள்ளலாம்.


எச்சரிக்கை
பப்பாசிக்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.