கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 26. Dezember 2010

சிக்கின் பிரியாணி

சிக்கன் பிரியாணி சத்தானதும்
சுவையானதும் ஆகும்.


தேவையான பொருட்கள் 
கோழி (சிறு துண்டுகள்)- ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 6
தக்காளி - 6
பச்சை மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 10
ஏலக்காய் - 15
அன்னாசி மொக்கு - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை - ஒன்று
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
ரம்பை இலை - தேவையானளவு
கலர் பொடி(சிகப்பு) - சிறிதளவு (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு
தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற
வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் வெங்காயம்,
 தக்காளி இரண்டையும் மெல்லிய
 நீளவாக்கில் நறுக்கி வைத்து
கொள்ளவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சை
மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக்
கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில்
புதினா, கொத்தமல்லி தழைகளை
கழுவி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில்)கறியினை
சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு
கழுவி அதில் தயிர் பாதி இஞ்சி,
பூண்டு விழுது மிளகாய் தூள் போட்டு
 கிளறி வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அது
சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசி மொக்கு போட்டு
பொரியவிடவும்.

அதன் பின்பு அதில் நறுக்கின வெங்காயம்
போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின
பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம்
வதக்கவும்.

பிறகு நறுக்கின வெங்காயம் தக்காளி,
கறியை போட்டு வதக்கவும். (தக்காளி
நன்கு வதக்கவேண்டும்).

புதினா கொத்தமல்லி போட்டு வதக்க
வேண்டும்.

இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு
மசாலா கறி துண்டங்களை சேரும்படி
நன்கு பிரட்டி விடவும்.

அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா
சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.

பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி
உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி
மூடி விடவும்.

சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து
வாசனை வந்ததும் அரிசியை களைந்து
போட்டுக் கிளறி விடவும்.

சகலதும் அவிந்ததும் சிக்கன் பிரியாணி
தயாராகிவிடும். அதன் பின்பு அதை
பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர்
ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில்)கறியினை சுத்தம்
செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில்
தயிர் பாதி இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்
தூள், போட்டு கிளறி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை
மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.